ஒரே நாளில் ராகுல், அமித்ஷா வருகை... மதுரையில் 7 அடுக்கு பாதுகாப்பு

Apr 12, 2024,01:57 PM IST

மதுரை : லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ஒரே நாளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் மதுரைக்கு வர உள்ளதால் மதுரையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இன்னும் ஒரு வார காலமே மீதம் உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 12ம் தேதியான இன்று பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.




பிறகு மாலையில் கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் முதல் முறையாக இணைந்து இன்று பிரச்சாரம் செய்ய உள்ளனர்.


அதே போல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ரோட்ஷோ நடத்த உள்ளார். மதுரை நேதாஜி ரோடு துவங்கி, தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை அவர் ரோடுஷோ நடத்த உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை அமித்ஷாவின் மதுரை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பகல் 3  மணி முதல் மதுரையில் வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


ஒரே நாளில் ராகுல் காந்தியும், அமித்ஷாவும் மதுரை விமான நிலையத்திற்கு வர உள்ளதால் மதுரை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமித்ஷாவின் வருகையால் மதுரை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்