ஊழலை மூடி மறைக்க பார்க்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளை விளாசிய அமித்ஷா!

Aug 04, 2023,10:00 AM IST
டெல்லி : எதிர்க்கட்சிகள் கூட்டணி என்பதற்காக டில்லியில் நடக்கும் ஊழல்களை ஆதரிக்க வேண்டாம். அவர்கள் கட்டிய பங்களாக்களை போல் ஊழல்களையும் மூடி மறைக்க பார்க்கிறார்கள் என எதிர்க்கட்சிகளையும், ஆம்ஆத்மி கட்சியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

லோக்சபாவில் இன்று டெல்லி சேவை மசோதாவை தாக்கல் செய்து, மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, இந்த மசோதா சுப்ரீம் கோர்ட் உத்தரவின்  அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் எந்த விவகாரம் தொடர்பாகவும் சட்டம் கொண்டு வர பார்லிமென்ட்டிற்கு உரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லிக்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.



உங்களின் கூட்டணி கட்சி என்பதற்காக டில்லியில் நடக்கும் ஊழல்களை ஆதரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். டில்லியின் நலனை பற்றி கருத்தில் கொள்ளுங்கள். கூட்டணியை அல்ல. பிரதமர் மோடி முழு பெரும்பான்மையோடு மீண்டும் வெற்றி பெறுவார். 

ஆம் ஆத்மி கட்சி 2015 ல் டில்லியில் ஆட்சிக்கு வந்தது. அவர்களின் நோக்கம் போராடுவது தான். சேவை செய்வது கிடையாது. அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை பெறுவது அவர்களின் பிரச்சனை கிடையாது. ஊழல் தடுப்பு பிரிவை தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம். அப்போது தான் அவர்கள் கட்டிய பங்களாவை போல் ஊழல்களை மறைக்க முடியும் என்றார் அமித்ஷா. 

அமித்ஷாவின் இந்த பேச்சிற்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டன. எதிர்க்ட்சிகளின் கூச்சல், குழப்பத்திற்கு இடையே டில்லி சேவை மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்