மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இன்றும் கூட பிசியாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு வயது 81. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் அமிர்தாப் பச்சன் இணைந்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்க்கப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை என்பது ரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}