மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இன்றும் கூட பிசியாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு வயது 81. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் அமிர்தாப் பச்சன் இணைந்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேபோல கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்க்கப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை என்பது ரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
காண்பதும் கேட்பதும்.. உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
உண்மையான பெண் சுதந்திரம் என்ன தெரியுமா?.. Women empowerment
நீங்க ஆயிரத்தில் ஒருவர் பாஸ்.. No one is you and that's your power!
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
அந்த 4 M இருக்கு பாத்தீங்களா.. அதை மட்டும் கன்ட்ரோல் பண்ணுங்க.. நீங்கதான் பெஸ்ட்!
ஆம்புலன்ஸ் தெரியும்.. அதுக்கு ஏன் அந்தப் பேரு வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
{{comments.comment}}