மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இன்றும் கூட பிசியாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு வயது 81. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் அமிர்தாப் பச்சன் இணைந்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேபோல கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்க்கப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை என்பது ரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
உன் புன்னகை!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
தொடர்ந்து மக்களை புலம்ப வைத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
வாழ்வின் விடைதெரியாத மர்மங்கள்.. நியாயங்களைத் தேடும் மனங்கள்!
வலிகளில் வாழ்க்கை...!
அதிசயம்!
மனிதனுக்கு பாடம் சொன்ன காகம் (சிறார் கதை)
{{comments.comment}}