மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இன்றும் கூட பிசியாக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு வயது 81. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் அமிர்தாப் பச்சன் இணைந்துள்ளார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்க்கப்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை என்பது ரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}