- கவிஞாயிறு இரா.கலைச் செல்வி
அன்பென்னும் உணர்வில்தான் அகிலமே சுழல்கிறது .!!
அனைத்து உயிர்களின் உன்னததேவையே அன்புதான்.!!
அன்புதான் மனித வாழ்வின் ஆதாரத்தேவை..!!
அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்..!!
அன்பு நிறைந்த இதயத்தில் ஒழுக்கம் நிலைத்திருக்கும்.!!
அன்பு குடியிருந்தால் ஆணவம் அழிந்துபோகும்..!!
அன்பே சிவம்என அறிந்திடுங்கள் அனைவரும்..!!
அன்பிற்க்கும் மூன்றெழுத்து ,சிவமிற்கும் மூன்றெழுத்து..!!
அன்பை சிறுதுளி விதைத்தால், பெருந்துளியாகும்..!!
அன்பின்வழி நின்றோரை அகிலமும் போற்றும்..!!
அன்பே அனைத்து உயிரினத்திற்கும் அருமருந்து..!!
அன்பைவிதைத்து அன்பையே அறுவடை செய்வோம்..!!
அன்பு உலகையே மாற்றும் உன்னதசக்தி..!!
அன்பு மனித குலத்தின் உயிர் மூச்சு. !!
அன்பை அன்போடு விதைத்துப் பாருங்கள்..!!
அபரிமிதமான மகிழ்ச்சியும் நிம்மதியும் கிட்டும்..!!
அன்பு கொடுக்கின்கூடும், பெற்றால் பெருகும்.!!
ஆயுள் வரை , நிலையில்லா இவ்வாழ்வில் ,
அன்பை விதைத்து செல்வோம்.உங்கள்சந்ததிகள்.!!
அன்போடு அறுவடை செய்து கொள்வார்கள்..!!
மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம்..!!
கடவுளின் பெயரால் கலவரங்கள் வேண்டாம்..!!
மனிதனை மனிதன் மதித்து நடத்திட வேண்டும் ..!!
மனிதம் போற்றி அன்பினை அறுவடை செய்வோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}