அன்பை அறுவடை செய் (கவிதை)

Apr 12, 2025,04:29 PM IST

- கவிஞாயிறு இரா.கலைச் செல்வி 


அன்பென்னும் உணர்வில்தான் அகிலமே சுழல்கிறது .!!

அனைத்து உயிர்களின் உன்னததேவையே அன்புதான்.!!

அன்புதான் மனித  வாழ்வின் ஆதாரத்தேவை..!!

அன்பை விதைத்து  அன்பையே அறுவடை செய்வோம்..!!


அன்பு நிறைந்த  இதயத்தில் ஒழுக்கம் நிலைத்திருக்கும்.!!

அன்பு குடியிருந்தால் ஆணவம் அழிந்துபோகும்..!!

அன்பே சிவம்என அறிந்திடுங்கள் அனைவரும்..!!

அன்பிற்க்கும்  மூன்றெழுத்து ,சிவமிற்கும் மூன்றெழுத்து..!!


அன்பை  சிறுதுளி விதைத்தால், பெருந்துளியாகும்..!!

அன்பின்வழி  நின்றோரை அகிலமும் போற்றும்..!!

அன்பே அனைத்து உயிரினத்திற்கும்  அருமருந்து..!!

அன்பைவிதைத்து அன்பையே அறுவடை செய்வோம்..!!




அன்பு  உலகையே  மாற்றும் உன்னதசக்தி..!!

அன்பு மனித குலத்தின் உயிர் மூச்சு. !!

அன்பை அன்போடு விதைத்துப் பாருங்கள்..!!

அபரிமிதமான மகிழ்ச்சியும் நிம்மதியும் கிட்டும்..!!


அன்பு கொடுக்கின்கூடும்,  பெற்றால் பெருகும்.!!

ஆயுள் வரை , நிலையில்லா   இவ்வாழ்வில் ,

அன்பை விதைத்து செல்வோம்.உங்கள்சந்ததிகள்.!!

அன்போடு அறுவடை செய்து கொள்வார்கள்..!!


மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம்..!!

கடவுளின் பெயரால் கலவரங்கள் வேண்டாம்..!!

மனிதனை மனிதன் மதித்து நடத்திட வேண்டும் ..!!

மனிதம் போற்றி அன்பினை அறுவடை செய்வோம்..!! ‌


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்