- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 29 :
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள் :
மார்கழி மாதத்தின் இந்த குளிர்ந்த காலை பொழுதில் தினமும் எழுந்து, நீராடி உன்னை போற்றி பாடி, உன்னுடைய அருளை பெறுவதற்காக சிறுமிகளாகிய நாங்கள் வந்து உன்னுடைய பொன் போன்ற மின்னும் திருவடிகளை வணங்கி நிற்கிறோம். நாங்கள் இப்படி வந்து நிற்பதற்கான காரணத்தை நீ கேட்க வேண்டும். பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து வாழும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, நாங்கள் ஒரு மாதமாக கடைபிடித்த விரதத்தில் குற்றம் குறை ஏதாவது இருந்தால் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இருக்கும் குறைகளை பெரிதாக நினைத்து எங்களை கண்டு கொள்ளாமல், உன்னுடைய அருளை வழங்காமல் இருந்து விடாதே. நீ கொடுக்கும் சிறிய பரிசுப் பொருட்களுக்காக உன்னை போற்றி பாடி நிற்கவில்லை. எதிரிகளை வெற்றி கொள்ளும் பெருமை மிகுந்த கோவிந்தனே! இந்த பிறவியில் மட்டுமல்ல இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீ எங்களின் குலத்தில் தோன்ற வேண்டும். உன்னுடைய உறவினர்களாக எங்களை ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே தொண்டு செய்து வாழ்வது எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். உன் மீதான பக்தியை தவிர மற்ற அனைத்து விதமான உலக இன்பங்களின் மீது ஏற்படும் பற்றுக்களை எங்களில் உள்ளங்களில் இருந்து அகற்றி விடு. உன்னுடைய அருளை மட்டுமே பெரிதாக எண்ணும் மனத்தை எங்களுக்கு அளித்திட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
{{comments.comment}}