- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 29 :
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள் :
மார்கழி மாதத்தின் இந்த குளிர்ந்த காலை பொழுதில் தினமும் எழுந்து, நீராடி உன்னை போற்றி பாடி, உன்னுடைய அருளை பெறுவதற்காக சிறுமிகளாகிய நாங்கள் வந்து உன்னுடைய பொன் போன்ற மின்னும் திருவடிகளை வணங்கி நிற்கிறோம். நாங்கள் இப்படி வந்து நிற்பதற்கான காரணத்தை நீ கேட்க வேண்டும். பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து வாழும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, நாங்கள் ஒரு மாதமாக கடைபிடித்த விரதத்தில் குற்றம் குறை ஏதாவது இருந்தால் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இருக்கும் குறைகளை பெரிதாக நினைத்து எங்களை கண்டு கொள்ளாமல், உன்னுடைய அருளை வழங்காமல் இருந்து விடாதே. நீ கொடுக்கும் சிறிய பரிசுப் பொருட்களுக்காக உன்னை போற்றி பாடி நிற்கவில்லை. எதிரிகளை வெற்றி கொள்ளும் பெருமை மிகுந்த கோவிந்தனே! இந்த பிறவியில் மட்டுமல்ல இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீ எங்களின் குலத்தில் தோன்ற வேண்டும். உன்னுடைய உறவினர்களாக எங்களை ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே தொண்டு செய்து வாழ்வது எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். உன் மீதான பக்தியை தவிர மற்ற அனைத்து விதமான உலக இன்பங்களின் மீது ஏற்படும் பற்றுக்களை எங்களில் உள்ளங்களில் இருந்து அகற்றி விடு. உன்னுடைய அருளை மட்டுமே பெரிதாக எண்ணும் மனத்தை எங்களுக்கு அளித்திட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}