ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 04 - ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

Dec 20, 2023,07:59 AM IST

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். தேவர்களின் விடியற்காலை நேரமான மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, பாவை நோன்பிருந்து, ஆண்டாளின் திருப்பாவை பாடி, பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். திருமாலின் பெருமைகளை இனிக்கும் தமிழில் 30 பாடல்களாக பாடி உள்ளார் ஆண்டாள் நாச்சியார்.


திருப்பாவை பாசுரம் 04 :




ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


கடல் நீரை முழுவதும் தனக்குள் மழையாக வைத்திருக்கும் மழை தெய்வமே, உன்னை போன்று கருமையான நிறம் கொண்ட எங்களின் தலைவனாகிய கண்ணனிடம் உன்னிடம் உள்ள மழை அனைத்தையும் கொடுத்து விடு. வலிமையான தோள்களை உடைய எங்கள் நாயகன் கையின் இருக்கும் சக்கரத்தை போல் மின்னல்கள் தெறித்தோட, அவரது மற்றொரு கையில் இருக்கும் வலம்புரி சங்கினை போல் இடி முழங்கி, அவரது கையில் இருக்கக் கூடிய சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் சரம் சரமாக, இந்த உலகத்தவர்கள் அனைவரும் வாழுவதற்கு தேவையான மழையை எங்கள் கண்ணன் வழங்குவார். அந்த தண்ணீரால் நிறைந்த நீர்நிலைகளில் நாங்களும் மார்கழியில் நீராடி மகிழ்ச்சியாக எங்கள் கண்ணனை பாடி பணிவோம்.


விளக்கம் : 


கண்ணனே உலகம் அனைத்திற்கும் தலைவன். அனைத்து செயல்களுக்கும் காரணமானவன் என்பதை இந்த பாடலில் கூறும் ஆண்டாள், திருமாலின் திருக்கரங்களில் இருக்கும் ஆயுதங்களின் பெருமைகளையும் குறிப்பிட்டுள்ளார். உலக உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்த நீரை தருவது மழை. அந்த மழை அனைத்து இடங்களிலும் சமமாக பெய்ய வேண்டும். ஒரு பகுதிக்கு மட்டும் கிடைப்பதில் என்ன பயன் இருக்க போகிறது? அதே போல் தான் இறைவனின் அருளும். அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். அந்த பக்தி என்னும் குளத்தில் ஆனந்தமாக நீராடி, இறைவனை அடைய வேண்டும் என்ற கருத்தை இந்த பாடலின் மூலம் விளக்கி உள்ளார் ஆண்டாள்.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்