ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 04 - ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

Dec 20, 2023,07:59 AM IST

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். தேவர்களின் விடியற்காலை நேரமான மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, பாவை நோன்பிருந்து, ஆண்டாளின் திருப்பாவை பாடி, பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். திருமாலின் பெருமைகளை இனிக்கும் தமிழில் 30 பாடல்களாக பாடி உள்ளார் ஆண்டாள் நாச்சியார்.


திருப்பாவை பாசுரம் 04 :




ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


கடல் நீரை முழுவதும் தனக்குள் மழையாக வைத்திருக்கும் மழை தெய்வமே, உன்னை போன்று கருமையான நிறம் கொண்ட எங்களின் தலைவனாகிய கண்ணனிடம் உன்னிடம் உள்ள மழை அனைத்தையும் கொடுத்து விடு. வலிமையான தோள்களை உடைய எங்கள் நாயகன் கையின் இருக்கும் சக்கரத்தை போல் மின்னல்கள் தெறித்தோட, அவரது மற்றொரு கையில் இருக்கும் வலம்புரி சங்கினை போல் இடி முழங்கி, அவரது கையில் இருக்கக் கூடிய சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் சரம் சரமாக, இந்த உலகத்தவர்கள் அனைவரும் வாழுவதற்கு தேவையான மழையை எங்கள் கண்ணன் வழங்குவார். அந்த தண்ணீரால் நிறைந்த நீர்நிலைகளில் நாங்களும் மார்கழியில் நீராடி மகிழ்ச்சியாக எங்கள் கண்ணனை பாடி பணிவோம்.


விளக்கம் : 


கண்ணனே உலகம் அனைத்திற்கும் தலைவன். அனைத்து செயல்களுக்கும் காரணமானவன் என்பதை இந்த பாடலில் கூறும் ஆண்டாள், திருமாலின் திருக்கரங்களில் இருக்கும் ஆயுதங்களின் பெருமைகளையும் குறிப்பிட்டுள்ளார். உலக உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்த நீரை தருவது மழை. அந்த மழை அனைத்து இடங்களிலும் சமமாக பெய்ய வேண்டும். ஒரு பகுதிக்கு மட்டும் கிடைப்பதில் என்ன பயன் இருக்க போகிறது? அதே போல் தான் இறைவனின் அருளும். அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். அந்த பக்தி என்னும் குளத்தில் ஆனந்தமாக நீராடி, இறைவனை அடைய வேண்டும் என்ற கருத்தை இந்த பாடலின் மூலம் விளக்கி உள்ளார் ஆண்டாள்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்