ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 15 .. "எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?"

Dec 31, 2023,09:27 AM IST

திருப்பாவை பாசுரம் 15 :


எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதம்!

வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!

ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

எல்லோரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


அழகான கிளி போன்ற பெண்ணே, இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயா? உனக்காக நாங்கள் காத்திருந்து இவ்வளவு நேரம் அழைத்தும் இன்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயா? என தோழி ஒருத்தி செல்ல கோபம் கொள்கிறாள். அதற்கு வீட்டிற்குள் இருக்கும் தோழி, சரி...சரி...என் மீது சிடுசிடுத்து கோவம் கொள்ளாதீர்கள். வந்து விடுகிறேன் என்கிறாள். அதற்கு வெளியில் நிற்கம் தோழி, நாங்கள் அனைவரும் முன்னமே எழுந்து வந்து தினமும் உனக்காக காத்திருக்க வேண்டுமா? அப்படி என்ன எங்களிடம் இல்லாத சிறப்பு உனக்கு உள்ளது என கோபம் கொள்கிறாள்.


அதற்கு அந்த பெண், நான் மட்டும் எழாமல் தூங்கி விட்டதை போல பேசுகிறீர்களே எல்லோரும் வந்த விட்டார்களா? என வீட்டிற்குள் இருந்த படியே கேட்கிறாள். அதற்கு வெளியில் இருக்கும் தோழி, எல்லோரும் வந்து விட்டார்களா என்பதை நீயே வெளியில் வந்து எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை மிக்க குவலயாபீடம் என்னும் யானையை அடக்கியவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமாகிய மாயக் கண்ணனை வணங்கி மகிழ நாங்கள் புறப்பட்டு விட்டோம். நீயும் அவனை வணங்கி மகிழ எங்களுடன் வா என்கிறார்கள்.


விளக்கம் :


மற்றவர்கள் வந்து விட்டார்களா, பக்தி செய்கிறார்களா என வீணான பேச்சுக்களில், மற்றவர்களுடன் ஒப்பிட்டு பொழுதை வீணடித்துக் கொண்டிருக்காமல்,  இறைவனை பாடி வணங்கி, மகிழ வேண்டும் என தோழிக்கு கூறுவதை போல் நமக்கு அறிவுரை வழங்குகிறார் ஆண்டாள். கண்ணனை சிறு குழந்தை தானே என சாதாரணமாக நினைத்து இருந்து விட வேண்டாம். அவன் லீலை செய்து விளையாடுவதால், அவனை விளையாட்டுப் பிள்ளை என நினைக்காதீர்கள். அவன் மிகவும் வலிமை மிக்கவன் என்பதையும் ஆண்டாள் இந்த பாடலில் விளக்கி உள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!

news

முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்