ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 26 : மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

Jan 11, 2024,09:51 AM IST

திருப்பாவை பாசுரம் 26 :


மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன

பாலன்ன வண்ணத்துள பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.


பொருள் :




பக்தர்களின் அதிகமாக அன்பு கொண்ட திருமாலே! மணி போன்று ஜொலிக்கும் திருமேனியை உடையவனே! மார்கழியில் நீராடி, உன்னை தரிசித்து, துதித்து வேண்டுவோர் வேண்டுவன அனைத்தையும் தரக்கூடியவனே. உலகத்தை எல்லாம் நடுநடுங்க வைக்கும் பால் சோற்றின் நிறம் கொண்ட பாஞ்சசன்னியத்தை கையில் ஏந்தியவனே. உன்னுடைய கையில் இருக்கும் பாஞ்சசன்யத்தை போல் சங்குகள் எங்கும் முழங்குகின்றன. பறைகள் பலரும் பெரும் சத்தத்துடன் ஒலிக்கின்றன. உன்னை துதித்து பலரும் பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். கோலமிட்டு, அழகிய விளக்கேற்றி, பாவை நோன்பினை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள். ஆலிலை மேல் கடலில் மிதப்பவனே, அவர்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளை தந்தருள வேண்டும்.


விளக்கம் :


திருப்பாவையின் ஒவ்வொரு பாடலிலும் கண்ணனின் புகழையும், பாவை நோன்பு பற்றியும் புகழ்ந்து பாடி வந்த ஆண்டாள், மார்கழி மாதம் நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பாவை நோம்பை நிறைவு செய்ய தயாராகும் அடியார்கள் பற்றி இந்த பாடலில் கூறி உள்ளார். மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி, பெருமாலை சென்று தரிசித்தாலே அவர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரக் கூடியவர் என மார்கழி மாத விரத மகிமையை எடுத்துக் கூறி உள்ளார். அதைத் தொடர்ந்து பெருமாலின் கையில் இருக்கும் பாஞ்சசன்யம் என்ற சங்கின் மகிமையை பற்றி குறிப்பிடுகிறார்.


கடலுக்கு அடியில் சென்று மறைந்திருந்த பாஞ்சசன் என்ற அசுரனை, தன்னுடைய குருவிற்கு அளித்த வாக்கிற்காக வதம் செய்து, அதனை சங்காக்கி, தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டவர் கிருஷ்ண பரமாத்மா. இந்த அசுர அம்சமான சங்கு என்பதால் இதை ஊதினாலே எதிரிகள் நடுநடுங்கி போவார்கள். அதனால் தான் குருஷேத்திர போரின் போது கெளரவர்களை நடுங்க செய்வதற்காக பாஞ்சசன்யத்தை கண்ணன் ஊதினார். உன்னை நினைத்து துதிப்பவர்களுக்கு மட்டுமல்ல பலவிதமான இசைக்கருவிகள் இசைத்து உன்னை பாடிக் கொண்டிருப்பவர்களுக்கும் பாவை நோன்பினை நிறைவு செய்வதற்கான உன்னுடைய அருளை தர வேண்டும் என  ஆண்டாள் வேண்டிக் கேட்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்