அம்மான்னா சும்மா இல்லடா.. இன்று என்ன நாள் தெரியுமா மக்களே!

Mar 12, 2026,03:14 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


தேசிய உழைக்கும்  அம்மாக்கள் தினம் என்று அம்மாவிற்கு மட்டும் சிறப்பா என்று கேட்கிறீர்களா?


ஆண்களும், பெண்களும் சரிசமமாக வேலைக்கு சென்றாலும் வீட்டு வேலை முழுமையாக செய்து விட்டு பெண்கள் வேலைக்கு செல்வதால் இன்றைய தினம் சிறப்பாக அவர்களுக்கு கொண்டாடப்படுகிறது.

 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 அன்று தேசிய உழைக்கும் அம்மாக்கள் தினம் (National Working Moms Day) கொண்டாடப்படுகிறது. பணி மற்றும் குடும்பம் இரண்டையும் திறம்பட நிர்வகிக்கும் தாய்மார்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் சமூகத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்து, பாராட்டுவதற்கு இந்நாள்  கொண்டாடப்படுகிறது. 




அம்மாக்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகளை சமமாக மேற்கொள்வது பெரிய சாதனையாகும். உழைக்கும் அம்மாக்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் கடின உழைப்பால் குடும்பத்தின் பொருளாதாரம் வலுப்பெறுகிறது. சமுதாய வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து ஒவ்வொரு பெண்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள் .


இந்த நாள் பெண்களின் உழைப்பை பாராட்டும் நாளாக கருதப்படுகிறது. உழைக்கும் அம்மாக்கள் நேர மேலாண்மையில் சிறந்தவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் குடும்பத்தையும் தொழிலையும் சிறப்பாக நடத்துகிறார்கள். சமூகத்தில் பெண்களின் மதிப்பை உயர்த்தும் தினமாக கருதப்படுகிறது. 


அம்மாக்களின் உழைப்பை மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நல்ல வாய்ப்பாக இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம். குடும்பமும் சமூகமும் முன்னேற அம்மாக்களின் பங்கு மிகப் பெரியது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்க வேண்டும் .


வேலை செய்து குடும்பத்தை கவனிக்கும் அம்மாக்களின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றியை தெரிவிப்போம். இந்த நாள் அம்மாக்களின் தியாகத்தை நினைவுபடுத்துவதோடு,குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அம்மாக்கள் பல சிரமங்களை தாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். வேலை செய்யும் அம்மாக்களுக்கு குடும்ப ஆதரவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்