சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாரத் சேவா ரத்னா முனைவர்.கோ.லதா எழுதிய புயலில் மலரும் பூக்கள் நூலை அமைச்சர் கே. என். நேரு தனது இல்லத்தில் நடந்த நிகழ்வில் வெளியிட்டார்.
கல்வித்தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை மாநகராட்சி பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் என பன்முகம் படைத்தவர் லதா. இவர் 425 கவிதைகளை நான்கு நாட்களில் எழுதி இரு உலக சாதனை புத்தகத்தில் (பியூசபெலஸ் வேர்ல்ட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும்) இடம் பெற்று உலக சாதனை நூலாக தொகுத்து 322 பக்கங்களில் பள்ளி மற்றும் நூலகங்களில் இடம்பெறக்கூடிய கவிதை நூலாக எழுதி ஊரகம் மற்றும் பொதுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் இல்லத்தில் வெளியிட்டுள்ளார்.
நூலினை நல்லாசிரியர் லதா வெளியிட ஊரகம் மற்றும் பொதுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு மற்றும் திருச்சி மாவட்ட மேயர் மாண்புமிகு மு. அன்பழகன் நூலினை பெற்றுக் கொண்டனர். நல்லாசிரியர் லதா முதல் நூலாக 137 பக்கத்தில் திருக்குறள் கூறும் நன்னெறிகள் என்ற தலைப்பிலே தன்னுடைய முதல் நூலை வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் நூலாக தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் தத்துவங்கள் என்ற தலைப்பிலே 132 பக்கங்களை உள்ளடக்கிய நூலாக வெளியிட்டுள்ளார். மூன்றாம் நூலாக புயலில் மலரும் பூக்கள் என்னும் தலைப்பில் 425 கவிதைகளை 322 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் புயலில் மலரும் பூக்கள் புத்தகத்தை நல்லாசிரியர் லதா வழங்க வீரமங்கை 2026 விருதை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருகரங்களால் நல்லாசிரியர் லதா பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய மூன்று நூல்களையும் தன்னுடைய தாயார் திருமதி லீலாவதி கோவிந்தராஜ் அவர்களுக்கு அர்ப்பணம் செய்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் நல்லாசிரியர் முனைவர் கோ லதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் தட்டுப்பாடு...மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை:முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!
உரிமைத்தொகை ஒருபுறம்; உயிர் அச்சம் மறுபுறம் - பெண்களைக் காக்கத் தவறிய திமுக அரசு: சீமான் ஆவேசம்!
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் மூடல்
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
என்னாது சிலிண்டர் தீந்துருச்சா.. அடுப்பில்லாத சமையல் கைவசம் இருக்கே.. வாங்க வாங்க!
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
{{comments.comment}}