ஒரு அதிகாரத்திற்கு ஒரு பாடல்.. 24 வரிகளில் 133 கவிதை.. சென்னையில் திருக்குறள் போட்டி!

Mar 12, 2026,04:08 PM IST

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலக செந்தமிழ் சங்கம் மற்றும் கின்னஸ் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய திருக்குறள் கவிதை எழுதும் நிகழ்வு நடத்தப்பட்டது. 


திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு ஒரு பாடலாக 24 வரிகளில் 133 கவிதை எழுதி  இரண்டு மணி நேரம் 30 நிமிடங்களில் நிகழ்த்திய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாக இடம்பெறச் செய்து உலக சாதனையாளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் மெடல் கேடயம் போன்றவைகளை உலக செந்தமிழ் சங்கம் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் பாரத் சேவா ரத்னா. முனைவர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக  உலக சாதனையாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 




உலக செந்தமிழ் சங்கம் நிறுவனர் ஒருங்கிணைப்பாளரும் இதில் பங்கேற்று உலக சாதனை சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .


உலக செந்தமிழ் சங்கத்தால் முதலாவது உலக சாதனை நிகழ்வாக திருவள்ளுவர் தினத்தன்று வைகை அணை ஆண்டிபட்டியில் 1330 திருக்குறளுக்கும் 1330 திருக்குறள் ஹைக்கூ கவிதைகளை ஒரு மணி நேரம் 15 நிமிடத்தில் 17 நபர்கள் பேனர் பர்மனன்ட் மார்க்கரில் எழுதி சாதனை செய்தது முதலாம் உலக சாதனையாக பதிவிடப்பட்டது.


இது உலக செந்தமிழ் சங்கம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் உலக சாதனை நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்