உன் ஞாபகங்கள் வலிக்கின்றது!

Jul 29, 2026,12:19 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


இதயம் தொட்ட உன் முதல் பார்வை

கரம் பிடித்த உன் முதல் தொடுகை

பெற்ற பிள்ளையை நீ கொஞ்சிய முதல் தருணம்

நீ நட்டு வைத்த ரோஜா, தென்னை,

எலுமிச்சை, மா பூத்தபோது

தெரிந்ததே உன் முகம்


ஆசையாய் நீ அமைத்த துளசி மாடம்

கொட்டுகின்ற மழை கண்டால்

எனை அழைக்கக் குடையோடு

நீ வரும் நினைவு




நடைப்பயிற்சிப் பாதை கண்டால்

நீயும் நானும் நடந்தது நிழலாடும்

பார்த்துப் பார்த்து நீ செய்த ஊஞ்சல் கண்டால்

ஊசலாடுகிறது என் மனம்


காணுகின்ற யாவுமே நீ

இருப்பினும் உன் ஞாபகங்கள் வலிக்கின்றதே!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

உன் ஞாபகங்கள் வலிக்கின்றது!

news

வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருமார்களைப் போற்றுவோம்.. குரு பூர்ணிமா சிறப்புகள்

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

news

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

news

பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை

அதிகம் பார்க்கும் செய்திகள்