அஞ்சலையம்மாள் நினைவு நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

Feb 20, 2025,04:14 PM IST

சென்னை: அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.


தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் தவெக தலைவர் விஜய்.  விஜய்யின் தவெக கட்சிக்கு தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி மக்கள் மத்தியில் கட்சி குறித்த எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தவெக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து முடித்த விஜய் தற்போது மாவட்ட நிர்வாகிகளின் நியமனம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இது ஒருபக்கம் நடக்க, மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். 




தமிழக வெற்றிக் கழக தொடங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 2ம் தேதியுடன்  ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஓராண்டு நிறைவையொட்டி கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர்களின்  சிலையையும் திறந்து வைத்தார். அதேபோல் கட்சி ஓராண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மாதம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 


இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.படப்பிடிப்புத் தளத்திலிருந்து மதிய உணவு இடைவெளியின் போது தவெக அலுவலகம் வந்த விஜய், அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி  மரியாதை செலுத்தினார். பிறகு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டார். அஞ்சலையம்மாள் நினைவு நாளை முன்னிட்டு இன்று தவெக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஏழை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கி சாப்பிட்டனர்.


இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.


மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

news

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி

news

என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!

news

தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்

news

தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!

news

2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா

news

"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை

news

மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை

news

நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்