சென்னை: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனின் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து மாணவி பாலியல் வழக்கில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஞானசேகரன் பேசியதாக உலா வரும் ஆடியோவில் அவர் குறிப்பிட்ட யார் அந்த சார் என்ற கேள்வி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
இதனால் அவர் பேசிய ஆடியோ ஆதாரங்களை உறுதி செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஞானசேகரனுடைய குரல் மாதிரியை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரின் குரல் பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையை நேற்று தொடங்கிய நீதிபதி சுப்ரமணியன் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் படி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் குரல் மாதிரி இன்று பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக ஞானசேகரன் புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு, தடவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிந்தபிறகு ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அவளின் அன்பு மலர்ந்த இரவு (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 4)
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!
வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
{{comments.comment}}