"நான் ரெடிதான் வரவா".. டான்ஸ் ஆடிய..  1300 பேருக்கு இன்னும் சம்பளம் தரலையாம்!

Oct 07, 2023,05:06 PM IST

சென்னை: லியோ படத்தில் நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக நடனக் கலைஞர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


விஜய், த்ரிஷா, நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்படம் அக்டோபர் 18ம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில், தொடந்து சிக்கல் வந்த வண்ணம் இருப்பதினால் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




படத்தில் ஆபாச வசனங்கள், வன்முறைக் காட்சிகளை சென்சார் போர்டு நீக்கிய பின்னரும் விஜய் பேசிய டிரெய்லர்  டைலாக்கில் கெட்டவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கும் பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் அதுவும் சர்ச்சையில் சிக்கியது. இந்த நிலையில், லியோ படத்திற்கு தற்பொழுது புது சிக்கல் உருவாகி இருக்கிறது. 


லியோ படத்தில், நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் பாக்கி உள்ளதாகவும், அதுதொடர்பாக ஆதாரத்துடன்  நடனக்கலைஞர்கள் புகார் அளித்துள்ளதாகவும் தற்பொழுது புது சர்ச்சை கிளம்பி நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகி வருகிறது.


உச்ச நடிகர்கள் படம் என்றாலே சின்னப் பிரச்சினை கூட பூதாகரமாகத்தான் பார்க்கப்படும். ஆனால் லியோ தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை வெத்து வருவதால் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர். ஆனால் அதையும் தாண்டி படம் பிரமாண்ட வெற்றி பெறும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்