சென்னை: லியோ படத்தில் நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக நடனக் கலைஞர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
விஜய், த்ரிஷா, நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்படம் அக்டோபர் 18ம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில், தொடந்து சிக்கல் வந்த வண்ணம் இருப்பதினால் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

படத்தில் ஆபாச வசனங்கள், வன்முறைக் காட்சிகளை சென்சார் போர்டு நீக்கிய பின்னரும் விஜய் பேசிய டிரெய்லர் டைலாக்கில் கெட்டவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கும் பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் அதுவும் சர்ச்சையில் சிக்கியது. இந்த நிலையில், லியோ படத்திற்கு தற்பொழுது புது சிக்கல் உருவாகி இருக்கிறது.
லியோ படத்தில், நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் பாக்கி உள்ளதாகவும், அதுதொடர்பாக ஆதாரத்துடன் நடனக்கலைஞர்கள் புகார் அளித்துள்ளதாகவும் தற்பொழுது புது சர்ச்சை கிளம்பி நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகி வருகிறது.
உச்ச நடிகர்கள் படம் என்றாலே சின்னப் பிரச்சினை கூட பூதாகரமாகத்தான் பார்க்கப்படும். ஆனால் லியோ தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை வெத்து வருவதால் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர். ஆனால் அதையும் தாண்டி படம் பிரமாண்ட வெற்றி பெறும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}