மும்பை: இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் விற்பனை மையங்களில் அதிகாலையிலேயே வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
உலகின் மிகவும் பிரபலமான ஐ போன் தயாரிப்பு நிறுவனம் தான் ஆப்பிள். ஆண்டு தோறும் இந்நிறுவனம் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐபோன் 16 சீரிஸ் இன்று விற்பனை தொடங்கியுள்ளது. ஐ போன் நிறுவனம் கடந்த 9ம் தேதி இந்த புதிய மாடல் போனை அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ஐபோன் 16 சீரிசில் மொத்தம் 4 மாடல்கள் உள்ளன. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, இபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல் போன்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் முன்பதிவு தொடங்கியது. ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை மையத்தில் அதிகாலை முதலே கூட்டம் கூடியது. கடை திறக்கும் வரை வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து ஐபோன்களை வாங்கிச் சென்றனர். மும்பையில் உள்ள பிகேசி ஆப்பிள் மையத்தில் 21 மணி நேரம் காத்திருந்து புதிய ஐபோனை வாங்கியதாக வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் நேற்று காலை 11 மணிக்கு மும்பை வந்தேன். முதல் நபராக நான் தான் மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு இன்று காலை 8 மணிக்கு சென்றேன். இந்த நாள் எனக்கு உற்சாகமாக தொடங்கி உள்ளது. மும்பையில் இந்த போனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
ஐபோன் 16 சீரிஸ் மொபைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகிய வங்கி அட்டைகள் பயன்படுத்தினால் ரூ.5000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும், கூடுதலாக, பெரும்பாலான முன்னணி வங்கிகள் 3 முதல் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா சுலப மாதத் தவணையினையும் வழங்குகிறது. கடந்த வருடம் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59.900க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த வருடத்திற்கான ஐபோன் 16 - ரூ.79,900த்திற்கும், ஐபோன் 16 பிளஸ் - ரூ.89.900த்திற்கும், ஐபோன் 16 ப்ரோ - ரூ.1,19,900த்திற்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,44,990க்கும் விற்கப்பட்டு வருகிறது. சென்ற வருட போன்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டிற்கான ஐபோன்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}