- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 26 ஜனவரி 3 ஆம் தேதி சனிக்கிழமை மார்கழி மாதம் 19ஆம் நாள் ஆருத்ரா தரிசனம் அனுஷ்டிக்கப்படுகிறது. மார்கழி மாதம் வரும் சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம் அன்று நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை "ஆருத்ரா தரிசனம்" என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் நடராஜப் பெருமானுக்கு ஆறு முறை மட்டுமே திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமான திருநாள் அனைத்து சிவாலயங்களிலும் நடத்தப்படும் ஆருத்ரா தரிசனம் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரே கல்லிலால் ஆன மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. இக்கோவிலில் மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மூர்த்தி, தீர்த்தம்,ஸ்தலம் எனும் சிறப்பிற்குரியது இக்கோவில். புராணங்களில் இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவர் இக்கோவிலில் அமைந்துள்ள மங்களநாதர் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு அருள்பாளிக்கும் அம்மன் மங்களநாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்து அருள் பாலிக்கிறார்.
உலகின் முதல் சிவன் கோவில் என்றும் உலகிலேயே மிகப்பெரிய மரகத நடராஜர் இருக்கும் கோவில் என்றும் சிறப்பு வாய்ந்தது திரு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்திருக்கும் மங்களநாதர் திருக்கோவில். நடராஜர் பெருமான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும்,மதுரையில் கால் மாறி ஆடியதாகவும் திரு உத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. பிற கோவில்களில் நடராஜர் சிலைகள் கற்சிலை, பஞ்சலோக சிலைகளையே காண முடியும்.ஆனால் இங்கு பச்சை மரகத கல்லால் உருவாக்கப்பட்ட சிலை இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

இத்திருத்தலத்தில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. வருடம் முழுவதும் அனைத்து நாட்களும் சந்தன காப்புடன் தரிசனம் தந்து அருள் பாலிக்கும் நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே பச்சை மரகத திருமேனியாக தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன நாளில், இக்கோவிலின் வடக்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ள, அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 03ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதை தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் மரகத நடராஜரின் சந்தனம் படி களையப்பட்டு மரகத திருமேனியாக காட்சி தருகிறார். பின்னர் அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை நடராஜருக்கு 32 வகையான சிறப்பு அபிஷேகங்கள, அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகிறது.
மீண்டும் சந்தனம் சாற்றப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் தீபாராதனை நடைபெறும். நடராஜ பெருமானின் சிலைக்கு ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனத்தால் காப்பிடப்பட்ட அலங்காரத்தில் தரிசனம் தருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆருத்ரா தரிசன விழாவின்போது சந்தனம் களையப்பட்டு புதிய சந்தன காப்பு சாற்றப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் விடிய விடிய இரவு முழுவதும் நடராஜப்பெருமானை அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்கின்றனர். நடராஜர் பெருமான் அருளால் அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
போராட்ட வாழ்க்கையை வெல்ல.. இறைவன் துணை நிற்பான்.. Pray Almighty God
குட்டி பயணம் தாங்க வாழ்க்கை.. மறக்காமல் அனுபவிங்க.. It is a short trip, enjoy it.!
தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு.. From Tamil Nadu to Malaysian Skies
தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
இவள் ஒரு தேவதை.. மறையாத மாமகள்.. A Little Angel "A Lifelong Legacy"
மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ
அகத்தி வேகாமல் கெட்டது முருங்கை வெந்து கெட்டது... உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!
தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
எது வேண்டும்.. யார் வேண்டும்.. சாய்ஸ் உங்கள் கையில்.. Choose Your Table
{{comments.comment}}