டில்லி : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் குறித்து தான் கணித்து கூறிய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறாகி விட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் டிவி லைவ் நிகழ்ச்சியில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குப்தா கதறி அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
2024ம் ஆண்டிற்கான லோக்சபா இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 01ம் தேதி நிறைவடைந்தது. அன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு மீடியாக்கள் வெளியிட்டன. இதில் பெரும்பாலான மீடியாக்கள் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தன. axis my india நிறுவனமும் கருத்து கணிப்பு வெளியிட்டது.

ஆனால் மற்றவர்களை விட இவர்கள் ஒரு படி மேலே போய், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 361 முதல் 401 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தது. அதே சமயம் இந்தியா கூட்டணி 131 முதல் 166 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 8 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் பாஜக கூட்டணிக்கு 300க்கும் கீழ்தான் சீட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணியே 230ஐத் தாண்டி விட்டது. மற்றவர்களுக்கு 18 சீட் வரை கிடைத்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவையொட்டி, இந்தியா டுடே டிவி நடத்திய டிவி லைவ் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் (நிர்வாக இயக்குநர்) பிரதீப் குப்தா கலந்து கொண்டார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து விவரித்து பேசிக் கொண்டிருந்த அவர், தங்களின் நிறுவனத்தின் கணிப்பு பொய்யாகி விட்டது. தாங்கள் கணித்ததை விட மிக குறைவான அளவிலேயே பாஜக கூட்டணி வென்றுள்ளது என கூறி கதறி அழுதார்.
நேரடி நிகழ்ச்சி ஒன்றில் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதீப் குப்தா அழுததை நிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக பேச்சாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரை சமாதானப்படுத்தி தேற்றிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}