டில்லி : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் குறித்து தான் கணித்து கூறிய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறாகி விட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் டிவி லைவ் நிகழ்ச்சியில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குப்தா கதறி அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
2024ம் ஆண்டிற்கான லோக்சபா இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 01ம் தேதி நிறைவடைந்தது. அன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு மீடியாக்கள் வெளியிட்டன. இதில் பெரும்பாலான மீடியாக்கள் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தன. axis my india நிறுவனமும் கருத்து கணிப்பு வெளியிட்டது.
ஆனால் மற்றவர்களை விட இவர்கள் ஒரு படி மேலே போய், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 361 முதல் 401 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்தது. அதே சமயம் இந்தியா கூட்டணி 131 முதல் 166 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 8 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் பாஜக கூட்டணிக்கு 300க்கும் கீழ்தான் சீட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியா கூட்டணியே 230ஐத் தாண்டி விட்டது. மற்றவர்களுக்கு 18 சீட் வரை கிடைத்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவையொட்டி, இந்தியா டுடே டிவி நடத்திய டிவி லைவ் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் axis my india நிறுவனத்தின் உரிமையாளர் (நிர்வாக இயக்குநர்) பிரதீப் குப்தா கலந்து கொண்டார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து விவரித்து பேசிக் கொண்டிருந்த அவர், தங்களின் நிறுவனத்தின் கணிப்பு பொய்யாகி விட்டது. தாங்கள் கணித்ததை விட மிக குறைவான அளவிலேயே பாஜக கூட்டணி வென்றுள்ளது என கூறி கதறி அழுதார்.
நேரடி நிகழ்ச்சி ஒன்றில் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதீப் குப்தா அழுததை நிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக பேச்சாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரை சமாதானப்படுத்தி தேற்றிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}