கேப்டன் பதவியை உதறுகிறார் பாபர் ஆசம்.. பாகிஸ்தானின் பெரும் தோல்வி எதிரொலி!

Nov 11, 2023,05:51 PM IST

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாபர் ஆசம் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதால் இந்த முடிவு என்று தகவல்.


மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பல முன்னாள் வீரர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் பாபர் ஆசம் கருதுகிறார். இதனால் அவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் முடிந்து தாயகம் திரும்பியதும் தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கான அரை இறுதி வாய்ப்பு மிக மிக மிக மங்கலாகவே உள்ளது. ஏதாவது அதிசயம், அற்புதம், ஆச்சரியம் நடந்தால்தான் அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். தொடர்ந்து பல முக்கியப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் இந்த நிலை.




இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலக பாபர் ஆசம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக முன்னாள் கிரிக்கெட் அணி தேர்வாளர் ரமீஸ் ராஜா உள்ளிட்ட சிலருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.


கொல்கத்தாவில் நடந்த பயிற்சியின்போது அங்கு வந்த ரமீஸ் ராஜாவிடம் இதுகுறித்து பாபர் ஆசம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த முடிவாக இருந்தாலும் நாடு திரும்பிய பின்னர் அறிவிக்க பாபர் ஆசம் திட்டமிட்டுள்ளாராம்.


அதேசமயம், உலகக் கோப்பைக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் பாபர் விலக வேண்டும் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளதாம். வீரராக மட்டும் தொடருமாறும் அவர்கள் அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனராம்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் ஆசம் இருக்கிறார். கடந்த   ஒன்றரை வருடமாக அவர் ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன அவர் கேப்டனாக ஜொலிக்கத் தவறி விட்டார். குறிப்பாக உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து விட்டது. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்