கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாபர் ஆசம் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதால் இந்த முடிவு என்று தகவல்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பல முன்னாள் வீரர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் பாபர் ஆசம் கருதுகிறார். இதனால் அவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் முடிந்து தாயகம் திரும்பியதும் தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கான அரை இறுதி வாய்ப்பு மிக மிக மிக மங்கலாகவே உள்ளது. ஏதாவது அதிசயம், அற்புதம், ஆச்சரியம் நடந்தால்தான் அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். தொடர்ந்து பல முக்கியப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் இந்த நிலை.

இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலக பாபர் ஆசம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக முன்னாள் கிரிக்கெட் அணி தேர்வாளர் ரமீஸ் ராஜா உள்ளிட்ட சிலருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
கொல்கத்தாவில் நடந்த பயிற்சியின்போது அங்கு வந்த ரமீஸ் ராஜாவிடம் இதுகுறித்து பாபர் ஆசம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த முடிவாக இருந்தாலும் நாடு திரும்பிய பின்னர் அறிவிக்க பாபர் ஆசம் திட்டமிட்டுள்ளாராம்.
அதேசமயம், உலகக் கோப்பைக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் பாபர் விலக வேண்டும் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளதாம். வீரராக மட்டும் தொடருமாறும் அவர்கள் அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனராம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் ஆசம் இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடமாக அவர் ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆன அவர் கேப்டனாக ஜொலிக்கத் தவறி விட்டார். குறிப்பாக உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து விட்டது. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}