Vandhe Bharat: பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு.. விரைவில்..  மக்களுக்கு Happy News!

Dec 12, 2023,06:37 PM IST

- மஞ்சுளா தேவி


கோவை: பெங்களூரு டூ கோயம்பத்தூர் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


சென்னைக்கு அடுத்து, கோவை ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் மாநகரம். கோவை மற்றும் பெங்களூர் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளும் உள்ளன. அதிக அளவில் இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தும் உள்ளது. இரு நகரங்களுக்கு இடையே உள்ள திருப்பூர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில்  தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. 


ஏற்கனவே கோவை - பெங்களூர் இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது காலையில் இயக்கப்படும் ரயிலாகும். இது 7 மணி நேர பயணமாகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதை விட குறைந்த நேரத்தில் இரு ஊர்களுக்கும் பயணிக்க முடியும். மேலும் அதிக அளவிலான மக்களும் இதைப் பயன்படுத்த முடியும். இந்தத் தகவலை வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.




கோயம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு ஒரு ரயில் அறிமுகமானால், அது கோவைக்குக் கிடைக்கும் 2வது வந்தே பாரத் ரயிலாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டின் 4வது வந்தே பாரத் ரயிலாகவும் அது அமையும். ஏற்கனவே சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு ரயிலும், சென்னையிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு இன்னொரு ரயிலும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பெங்களூர் டூ கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படும் என்ற தேதியும், நேரமும் இன்னும் அறிவிக்கவில்லை.  இருப்பினும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்

news

ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!

news

Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!

news

CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!

news

போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்