- மஞ்சுளா தேவி
கோவை: பெங்களூரு டூ கோயம்பத்தூர் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்து, கோவை ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் மாநகரம். கோவை மற்றும் பெங்களூர் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளும் உள்ளன. அதிக அளவில் இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தும் உள்ளது. இரு நகரங்களுக்கு இடையே உள்ள திருப்பூர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
ஏற்கனவே கோவை - பெங்களூர் இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது காலையில் இயக்கப்படும் ரயிலாகும். இது 7 மணி நேர பயணமாகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதை விட குறைந்த நேரத்தில் இரு ஊர்களுக்கும் பயணிக்க முடியும். மேலும் அதிக அளவிலான மக்களும் இதைப் பயன்படுத்த முடியும். இந்தத் தகவலை வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோயம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு ஒரு ரயில் அறிமுகமானால், அது கோவைக்குக் கிடைக்கும் 2வது வந்தே பாரத் ரயிலாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டின் 4வது வந்தே பாரத் ரயிலாகவும் அது அமையும். ஏற்கனவே சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு ரயிலும், சென்னையிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு இன்னொரு ரயிலும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் டூ கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படும் என்ற தேதியும், நேரமும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}