- மஞ்சுளா தேவி
கோவை: பெங்களூரு டூ கோயம்பத்தூர் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்து, கோவை ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் மாநகரம். கோவை மற்றும் பெங்களூர் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளும் உள்ளன. அதிக அளவில் இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தும் உள்ளது. இரு நகரங்களுக்கு இடையே உள்ள திருப்பூர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
ஏற்கனவே கோவை - பெங்களூர் இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது காலையில் இயக்கப்படும் ரயிலாகும். இது 7 மணி நேர பயணமாகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதை விட குறைந்த நேரத்தில் இரு ஊர்களுக்கும் பயணிக்க முடியும். மேலும் அதிக அளவிலான மக்களும் இதைப் பயன்படுத்த முடியும். இந்தத் தகவலை வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோயம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு ஒரு ரயில் அறிமுகமானால், அது கோவைக்குக் கிடைக்கும் 2வது வந்தே பாரத் ரயிலாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டின் 4வது வந்தே பாரத் ரயிலாகவும் அது அமையும். ஏற்கனவே சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு ரயிலும், சென்னையிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு இன்னொரு ரயிலும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் டூ கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படும் என்ற தேதியும், நேரமும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்
எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!
மணாளனின் மாண்புகள்!
Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..
{{comments.comment}}