டாக்கா: வங்கதேச இடைக்கால அரசாங்கத்தில், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உள்துறை விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்த குதா பக்ச் சௌத்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாணவர் எழுச்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட உஸ்மான் ஹாடியின் படுகொலையைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்புகளே இந்த விலகலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி, கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹாடியின் மரணத்திற்கு நீதிகேட்டு 'இன்குலாப் மஞ்சோ' என்ற அமைப்பு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. குற்றவாளிகளைக் கண்டறியத் தவறியதற்காக உள்துறை ஆலோசகர் மற்றும் சிறப்பு உதவியாளர் குதா பக்ச் சௌத்ரி ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று 24 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை அன்று குதா பக்ச் சௌத்ரி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதனை வங்கதேச அதிபர் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அரசாணை தெரிவிக்கின்றது.
முன்னாள் காவல்துறை தலைவரான இவர், கடந்த நவம்பர் 10-ம் தேதிதான் இந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாடியின் படுகொலைக்கு நீதி கோரி டாக்காவின் ஷாபாக் பகுதியில் இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து வருவதால், அந்நாட்டு அரசியல் களம் மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
மறைவேடங்கள் நிறைந்த இவ்வுலகில்.. In the world of disguise
அன்புக்குரிய சான்டா.. Santa, the classy lovable one!
பிறந்தார் இயேசு பாலன்.. கொண்டாடுவோம்.. Merry Christmas, Merry Christmas!
நீ வாழும் கணக்கு!
{{comments.comment}}