பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Feb 14, 2026,03:29 PM IST

சென்னை: திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதாக கூறி பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் என செய்தி வந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 


"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.




தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். 


மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உணர்வு

news

தமிழகத்தில் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

news

தோற்குமா மனிதசக்தி; செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை (அத்தியாயம் 2)

news

திமுக.,வில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில்

news

நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா.. கு.ஞானசம்பந்தன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

news

கடன்பெற்றவர்களை மிரட்டக்கூடாது: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

news

தெய்வீக ராத்திரி மஹா சிவராத்திரி!

news

புல்வாமா.. நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த 40 இந்தியர்களை நினைவுகூர்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்