உலகின் மிகவும் இளம் வயது அதிபராகப் போகும் வங்கதேசத்தின் ஷிரின் ஷர்மின் செளத்ரி!

Jan 27, 2023,01:29 PM IST
டாக்கா: வங்கதேசத்தின் அடுத்த அதிபராக அந்த நாட்டு நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் செளத்ரி உருவெடுப்பார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் அதிபர் ஆனால், உலகிலேயே மிகவும் இளம் வயது அதிபராகவும் அவர் சாதனை படைப்பார்.



வங்கதேச அதிபராக ஷிரின் ஆனால், அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் வரலாற்றையும் அவர் படைப்பார். தற்போது அந்த நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். ஷிரின் அதிபரானால், ஒரே நேரத்தில் பிரதமர் மற்றும் அதிபர் இருவரும் பெண்களாக இருக்கும் நாடாகவும் வங்கதேசம் உருவெடுக்கும்.

ஷேக் ஹசீனா 2009ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். அவரது அமைச்சரவையில் பலரும் பெண்கள்தான். உள்துறை அமைச்சராக சஹாரா கதுன் இருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சராக திபு மோனி உள்ளார். இவர் கல்வி அமைச்சராகவும் செயல்படுகிறார். இவர் இஸ்லாமிய பழமைவாதத்தை எதிர்த்து துணிகரமாக செயல்படக் கூடியவரும் கூட. 

வங்கதேச ஜனாதிபதி தேர்தல் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.  தற்போது ஜனாதிபதி அப்துல் ஹமீத் விலகியதும் ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 23ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே தேரத்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஷிரின் ஷர்மின் பெயரை இன்னும் ஆளும் அவாமி லீக் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால் அவரைத்தான் ஆளும் கட்சி வேட்பாளராக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்