மும்பை : விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்புவதாக BCCI-யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலியின் அனுபவம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்று கருதும் BCCI, தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், கோலியும் விலகினால், KL ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே இந்தியா இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்புவதாக BCCI-யிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் நெருங்கி வருவதால், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று BCCI கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், கோலி இன்னும் தனது பதிலை தெரிவிக்கவில்லை. "அவர் மனதளவில் உறுதியாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக போவதாக போர்டிடம் தெரிவித்துள்ளார். முக்கியமான இங்கிலாந்து தொடர் வரவிருப்பதால், மறுபரிசீலனை செய்யுமாறு BCCI கேட்டுள்ளது. அவர் இன்னும் பதில் தரவில்லை" என்று செய்திகள் கூறுகின்றன.

BCCI அதிகாரி ஒருவர் விராட் கோலியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் சில தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். கோலி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். "அவர் இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார். ஆர்வத்துடனும் இருக்கிறார். அவர் அணியில் இருந்தால், அது மற்ற வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும்" என்று பெயர் வெளியிட விரும்பாத BCCI அதிகாரி NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "அவர் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்படி கேட்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.
ஒருவேளை கோலி இங்கிலாந்துக்கு வரவில்லை என்றால், அது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். ஏற்கனவே ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டார். இதனால், இந்திய அணி அனுபவம் குறைந்த வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். KL ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
விராட் கோலி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஒரு சதம் அடித்தார். ஆனால், அதன் பிறகு அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அந்த தொடரில் அவரது சராசரி 23.75 மட்டுமே. இது ஒரு தொடரில் மட்டும் நடந்த தவறு கிடையாது. கடந்த ஐந்து வருடங்களில் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் உட்பட 1990 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அவர் முன்பு வைத்திருந்த சாதனைகளுக்கு அருகில் கூட இல்லை.
கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். IPL 2025 போட்டியில் 500 ரன்களுக்கு மேல் எடுத்து கோலி தனது பழைய ஃபார்முக்கு திரும்பி வந்துள்ளார். இதனால், இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், தற்போது அவர் ஓய்வு பெற இருப்பதாக வரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}