மும்பை : விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்புவதாக BCCI-யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலியின் அனுபவம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்று கருதும் BCCI, தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், கோலியும் விலகினால், KL ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே இந்தியா இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்புவதாக BCCI-யிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் நெருங்கி வருவதால், அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று BCCI கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், கோலி இன்னும் தனது பதிலை தெரிவிக்கவில்லை. "அவர் மனதளவில் உறுதியாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக போவதாக போர்டிடம் தெரிவித்துள்ளார். முக்கியமான இங்கிலாந்து தொடர் வரவிருப்பதால், மறுபரிசீலனை செய்யுமாறு BCCI கேட்டுள்ளது. அவர் இன்னும் பதில் தரவில்லை" என்று செய்திகள் கூறுகின்றன.

BCCI அதிகாரி ஒருவர் விராட் கோலியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் சில தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். கோலி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். "அவர் இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார். ஆர்வத்துடனும் இருக்கிறார். அவர் அணியில் இருந்தால், அது மற்ற வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும்" என்று பெயர் வெளியிட விரும்பாத BCCI அதிகாரி NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "அவர் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்படி கேட்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.
ஒருவேளை கோலி இங்கிலாந்துக்கு வரவில்லை என்றால், அது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். ஏற்கனவே ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டார். இதனால், இந்திய அணி அனுபவம் குறைந்த வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். KL ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
விராட் கோலி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஒரு சதம் அடித்தார். ஆனால், அதன் பிறகு அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அந்த தொடரில் அவரது சராசரி 23.75 மட்டுமே. இது ஒரு தொடரில் மட்டும் நடந்த தவறு கிடையாது. கடந்த ஐந்து வருடங்களில் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் உட்பட 1990 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அவர் முன்பு வைத்திருந்த சாதனைகளுக்கு அருகில் கூட இல்லை.
கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். IPL 2025 போட்டியில் 500 ரன்களுக்கு மேல் எடுத்து கோலி தனது பழைய ஃபார்முக்கு திரும்பி வந்துள்ளார். இதனால், இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், தற்போது அவர் ஓய்வு பெற இருப்பதாக வரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}