துபாய்: ஆசியா கோப்பையை இந்திய அணியிடம் வேறு ஒருவர் மூலம் வழங்காமல் தானே எடுத்துக் கொண்ட ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அது புகார் செய்யவுள்ளது.
துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால், ஏ.சி.சி. தலைவர் மோசின் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் நிலவும் பதற்றம் காரணமாகவும், மோசின் நக்வியின் சில பேச்சுக்கள் காரணமாகவும் இந்திய அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. நாட்டிற்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து கோப்பையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா இந்திய அணியின் செயலை நியாயப்படுத்திக் கூறியுள்ளார்.
இந்தியா வாங்க மறுத்ததால், நக்வி கோப்பையையும், பதக்கங்களையும் இந்திய அணியிடம் கொடுக்காமல் எடுத்துச் சென்றது "சிறுபிள்ளைத்தனமான செயல்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நக்வியின் இந்தச் செயலுக்கு எதிராக, வருகின்ற நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், விளையாட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}