துபாய்: ஆசியா கோப்பையை இந்திய அணியிடம் வேறு ஒருவர் மூலம் வழங்காமல் தானே எடுத்துக் கொண்ட ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அது புகார் செய்யவுள்ளது.
துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால், ஏ.சி.சி. தலைவர் மோசின் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் நிலவும் பதற்றம் காரணமாகவும், மோசின் நக்வியின் சில பேச்சுக்கள் காரணமாகவும் இந்திய அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. நாட்டிற்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து கோப்பையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா இந்திய அணியின் செயலை நியாயப்படுத்திக் கூறியுள்ளார்.
இந்தியா வாங்க மறுத்ததால், நக்வி கோப்பையையும், பதக்கங்களையும் இந்திய அணியிடம் கொடுக்காமல் எடுத்துச் சென்றது "சிறுபிள்ளைத்தனமான செயல்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நக்வியின் இந்தச் செயலுக்கு எதிராக, வருகின்ற நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், விளையாட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}