நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்

Sep 29, 2025,10:40 AM IST

துபாய்: ஆசியா கோப்பையை இந்திய அணியிடம் வேறு ஒருவர்  மூலம் வழங்காமல் தானே எடுத்துக் கொண்ட ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அது புகார் செய்யவுள்ளது.


துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால், ஏ.சி.சி. தலைவர் மோசின் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.




இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் நிலவும் பதற்றம் காரணமாகவும், மோசின் நக்வியின் சில பேச்சுக்கள் காரணமாகவும் இந்திய அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. நாட்டிற்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து கோப்பையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா இந்திய அணியின் செயலை நியாயப்படுத்திக் கூறியுள்ளார்.


இந்தியா வாங்க மறுத்ததால், நக்வி கோப்பையையும், பதக்கங்களையும் இந்திய அணியிடம் கொடுக்காமல் எடுத்துச் சென்றது "சிறுபிள்ளைத்தனமான செயல்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


நக்வியின் இந்தச் செயலுக்கு எதிராக, வருகின்ற நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், விளையாட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்