துபாய்: ஆசியா கோப்பையை இந்திய அணியிடம் வேறு ஒருவர் மூலம் வழங்காமல் தானே எடுத்துக் கொண்ட ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அது புகார் செய்யவுள்ளது.
துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால், ஏ.சி.சி. தலைவர் மோசின் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் நிலவும் பதற்றம் காரணமாகவும், மோசின் நக்வியின் சில பேச்சுக்கள் காரணமாகவும் இந்திய அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. நாட்டிற்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து கோப்பையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா இந்திய அணியின் செயலை நியாயப்படுத்திக் கூறியுள்ளார்.
இந்தியா வாங்க மறுத்ததால், நக்வி கோப்பையையும், பதக்கங்களையும் இந்திய அணியிடம் கொடுக்காமல் எடுத்துச் சென்றது "சிறுபிள்ளைத்தனமான செயல்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நக்வியின் இந்தச் செயலுக்கு எதிராக, வருகின்ற நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், விளையாட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}