உன்னால் உன்மத்தம் ஆனேன்!

Aug 25, 2026,04:09 PM IST

- பா. பானுமதி


பட்டுப்பாவாடை கட்டி 

பார்ப்பவரை எல்லாம் உன் வசப்படுத்துகிறாய்


வண்ணச் சேலை கட்டி 

வானவில்லின் வர்ண ஜாலம் காட்டி 

அனைவரையும் வசீகரிக்கிறாய்


மலர்கள் பலவகையாய்ச் சூடி 

மணம் பரப்பிமனம் கவர்கிறாய்




மாலைகளை சூடிக்கொண்டு 

மதி மயக்குகிறாய் 

மந்திரம் போடாமல் 


சொக்கனோடு இருந்து கொண்டு 

இப்படி என்னை சொக்க வைப்பது சரியா 

சுந்தரியே !


மதுரை மீனாட்சி மரகதவல்லி வாழ்க வாழ்க

வளையலை விற்று வளைத்து போடும் 

மகேஸ்வரா வாழ்க வாழ்க!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்