திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!

Apr 20, 2026,06:22 PM IST

- புவனா மதிமன்னன்


ஒரு மனிதன் வாழ்க்கையில் உறவுகள் மிகவும் முக்கியமானவை. சிலர் நம் வாழ்க்கையில் மெதுவாக நுழைகிறார்கள்; சிலர் திடீரென நம்மிடம் நெருக்கமாகிப் போகிறார்கள். அந்த நெருக்கம் நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும். நாமும் அவர்களை உண்மையான உறவாக எண்ணி, மனம் திறந்து பழக ஆரம்பிக்கிறோம். ஆனால், அதே வேகத்தில் அவர்கள் திடீரென்று விலகி விடும்போது, அது நமக்கு குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.


இந்த மாதிரியான நடத்தை பல காரணங்களால் ஏற்படலாம். முதலில், சிலர் தங்கள் தேவைக்காக மட்டும் நெருக்கமாக வரலாம். அவர்களுக்கு தேவையானது கிடைத்தவுடன், அவர்கள் மெதுவாக விலகி விடுவார்கள். இதை உணராமல் நாம் உண்மையான பாசத்துடன் பழகியிருப்பதால் தான் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்.


இரண்டாவது, சிலருக்கு உறவுகளை தொடர்ந்து பேணும் மனநிலை இருக்காது. ஆரம்பத்தில் ஆர்வமாக இருப்பார்கள்; ஆனால் காலப்போக்கில் அந்த ஆர்வம் குறைந்து விடும். அவர்கள் மனதில் நிலைத்தன்மை இல்லாததால், உறவுகளும் நீடிக்காது.


மூன்றாவது, தவறான புரிதல்கள் அல்லது சொல்லாத எதிர்பார்ப்புகள் காரணமாகவும் இப்படியான பிரிவு நடக்கலாம். சில சமயம் அவர்கள் ஏதோ காரணத்தால் மனதில் விலகி இருப்பார்கள், ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.




இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில், யாரிடமும் உடனே முழு நம்பிக்கையையும் மனதையும் கொடுக்காமல் இருக்க வேண்டும். உறவுகளை மெதுவாக வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அதே சமயம், யாராவது விலகி விட்டால் அதை அதிகமாக மனதில் வைத்து துன்பப்படாமல் இருக்கவும் வேண்டும். 


எல்லா உறவுகளும் நமக்காக நீடிக்க வேண்டியதில்லை என்பது உண்மை.


இறுதியாக, ஒருவரின் வருகையும், அவர்களின் பிரிவும் நமக்கு ஒரு பாடம் கற்றுத்தருகிறது. து மனிதர்களை புரிந்து கொள்ளும் அனுபவமாகும். நம்மை மதிக்கும், உண்மையாக இருக்கும் உறவுகளையே நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றவை வந்தும் போகும் அலைகள் போல தான். 


“உண்மையான உறவு நேரத்தால் சோதிக்கப்பட்டு நிலைத்திருக்கும்; நேரத்தால் மறைந்து போவது உறவாகவே இல்லை.”


(புவனா மதிமன்னன், ஆசிரியர், தஞ்சாவூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்