சென்னை: 2 வீடுகளுடன், கலக்கலாக கோலாகலமாக தொடங்கியுள்ளது பிக் பாஸ் தமிழ் சீசன் 7. கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.
விஜய் டிவியின் முத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று கோலாகலமாக தொடங்கியது. கமல்ஹாசன் மீண்டும் தொகுப்பாளராக களம் காண்கிறார்.
2017ம் ஆண்டு முதல் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, விஜய் டிவியில் வருடா வருடம் நடந்து வருகிறது. முதல் சீசன் 98 நாட்கள் நடைபெற்றது. வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018ம் ஆண்டு நடந்த 2வது சீசனில் நடிகை ரித்விகா வெற்றி வாகை சூடி, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற முதல் பெண்ணாக சாதனை படைத்தார். இந்த ஷோவானது 105 நாட்கள் நடைபெற்றது.
2019ம் ஆண்டு நடந்த 3வது சீசனின் வெற்றியாளராக முகென் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவும் 105 நாட்களுக்கு நடைபெற்றது.
2020ம் ஆண்டு 4வது சீசன் நடந்தேறியது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ம் ஆண்டு நடந்த 5வது சீசனின் வெற்றியாளராக நடிகர் ராஜு மோகன் வெற்றி பெற்றார்.
அதிரடியாக பெரும் பரபரப்புடன் நடந்த சீசன் என்றால் அது பிக் பாஸ் 6தான். குறிப்பாக வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸீம் கடும் எதிர்ப்புகளையும், வசவுகளையும் சந்தித்தார். அவரது பிஹேவியர் கடும் சலசலப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது. ஆனாலும் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், மக்களின் மனம் கவர்ந்த விக்ரமன் 2வது இடத்தையே பிடித்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது பிக் பாஸ் 7 சீசன் தொடங்கியுள்ளது. இந்த முறை பல்வேறு விதி மாற்றங்கள் வந்துள்ளன். வீடுகளும் 2 ஆகியுள்ளது. வித்தியாசமான போட்டியாளர்களுடன் இந்த சீசன் எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}