டில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.11,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் இந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்பது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பீகார், ஆந்திராவிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இன்றைய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என மறுத்திருந்தாலும், கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதே போல் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திராவிற்கு புதிய தலைநகரான அமராவதி நகரை அமைப்பது உள்ளிட்டவற்றுக்காக ரூ. 15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் சந்திரபாபு நாயுடு முன்பே கோரிக்கை வைத்த படி, நிலுவையில் இருந்த வெள்ள மற்றும் வறட்சி நிவாரண நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் வெள்ள நிவாரண நிதி இன்றைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்களை சந்தித்த தமிழகம் இந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு தமிழகத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்றும் கூட பல பகுதிகளில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகளும், பாலங்களும் சரி செய்யப்படாமல் உள்ளன. நெல்லை நகரமே வெள்ளத்தில் மூழ்கிய போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலானது.
மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி அறிவித்துள்ள மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள், மீதி இருப்பவை அவற்றின் கூட்டணி கட்சிகளும், பாஜக.,விற்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் மாநிலங்களும் தான் என சொல்லப்படுகிறது. தங்கள் கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும், கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே பட்ஜெட் அறிவிப்புகளில் பெரும்பாலானவை வெளியாகி உள்ளதால் எதிர்க்கட்சிகள், கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றன.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}