30 விஷம வீடியோக்கள்.. வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து திட்டமிட்டு அவதூறு.. ஒருவர் கைது

Mar 07, 2023,12:28 PM IST

பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பிய பீகாரைச் சேர்ந்த அமன் குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை இந்த நபர் பதிவு செய்ததாக பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஜமுயி என்ற மாவட்டத்தில் வைத்து இந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேரை போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற மூன்று பேர் ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மனீஷ் காஷ்யப் என்று தெரிய வந்துள்ளது. அமன்குமார், ஜமுயி மாவட்டத்தில் உள்ள லக்ஷமிபூர் என்ற பகுதியைச் சேர்ந்தவன். மற்ற 3 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.





இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பியுள்ளது. கிட்டத்தட்ட 30 அவதூறான, தவறான வீடியோக்களை இந்தக் கும்பல் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம்  செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் பீதி அடைந்து வெளியேற வேண்டும் என்பதே இவர்களது திட்டமாகும்.


இதற்கிடையே, இது போல திட்டமிட்டு பரப்பப்பட்ட 42 வீடியோக்களை நீக்குமாறு யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், ஜிமெயில் நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதில் பேஸ்புக்கில் 9 வீடியோக்கள், டிவிட்டர் யூடியூபில் தலா 15, ஜிமெயில் மூலம் 3 வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.


சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்