பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பிய பீகாரைச் சேர்ந்த அமன் குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை இந்த நபர் பதிவு செய்ததாக பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஜமுயி என்ற மாவட்டத்தில் வைத்து இந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேரை போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற மூன்று பேர் ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மனீஷ் காஷ்யப் என்று தெரிய வந்துள்ளது. அமன்குமார், ஜமுயி மாவட்டத்தில் உள்ள லக்ஷமிபூர் என்ற பகுதியைச் சேர்ந்தவன். மற்ற 3 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பியுள்ளது. கிட்டத்தட்ட 30 அவதூறான, தவறான வீடியோக்களை இந்தக் கும்பல் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் பீதி அடைந்து வெளியேற வேண்டும் என்பதே இவர்களது திட்டமாகும்.
இதற்கிடையே, இது போல திட்டமிட்டு பரப்பப்பட்ட 42 வீடியோக்களை நீக்குமாறு யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், ஜிமெயில் நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பேஸ்புக்கில் 9 வீடியோக்கள், டிவிட்டர் யூடியூபில் தலா 15, ஜிமெயில் மூலம் 3 வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}