பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பிய பீகாரைச் சேர்ந்த அமன் குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை இந்த நபர் பதிவு செய்ததாக பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஜமுயி என்ற மாவட்டத்தில் வைத்து இந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேரை போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற மூன்று பேர் ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மனீஷ் காஷ்யப் என்று தெரிய வந்துள்ளது. அமன்குமார், ஜமுயி மாவட்டத்தில் உள்ள லக்ஷமிபூர் என்ற பகுதியைச் சேர்ந்தவன். மற்ற 3 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பியுள்ளது. கிட்டத்தட்ட 30 அவதூறான, தவறான வீடியோக்களை இந்தக் கும்பல் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் பீதி அடைந்து வெளியேற வேண்டும் என்பதே இவர்களது திட்டமாகும்.
இதற்கிடையே, இது போல திட்டமிட்டு பரப்பப்பட்ட 42 வீடியோக்களை நீக்குமாறு யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், ஜிமெயில் நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பேஸ்புக்கில் 9 வீடியோக்கள், டிவிட்டர் யூடியூபில் தலா 15, ஜிமெயில் மூலம் 3 வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}