பாட்னா: பீகாரில் கடும் வெப்ப அலை வீசிவருவதால் பள்ளி சென்ற மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்டி வதைத்த வெப்பம், தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையாக உள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் வெயில் வெளுத்து வருகிறது. அங்கெல்லாம் 120 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. பெரும்பாலான வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை இறை வணக்க கூட்டம் நடந்தது. இந்த நிகழ்விற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அப்போது காலை வேலையிலேயே வெயில் அதிகம் அடித்ததால், இறைவணக்கம் செய்து கொண்டிருந்த 7 மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு சற்று நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 7 பேரும் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சதார் மருத்துவமனை டாக்டர் கூறுகையில், வெப்பநிலை அதிகரித்ததால் மாணவிகள் கடினமான நிலையை எதிர்கொண்டனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர். வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை மூலம் அதிக அளவில் நீர் வெளியேறும் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}