சென்னை: அதிமுக உடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, கூட்டணி பலமாகவே உள்ளது என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.
சென்ற தேர்தலின் போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டன. அதனையடுத்து அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை தரக்குறைவாக பேசியதனால், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வந்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து, பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவராக நயினார் நகேந்திரன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகியது. இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக செய்தியாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனித்து தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், நெல்லையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இது அதிமுக மற்றும் பாஜக தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. சில பேச்சுக்கள் தவராக புரிந்துகொள்ளப்படுகிறதே தவிர கூட்டணி பலமாக தான் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறோம் என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.
என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
{{comments.comment}}