டில்லி : நடந்து முடிந்த அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் 2024 ல் பாஜக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை பாஜகக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (ஜூன் 02) காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி பாஜக 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 15 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதே சமயம் எதிர்க்கட்சியான என்பிபி., 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 3 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம்.. எதிர்க்கட்சிக்கு ஒன்னே ஒன்னு.. மிச்ச 31 இடங்களையும் வெல்லும் ஆளும் எஸ்கேஎம்!
இந்த முறை கூடுதல் இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதால் இந்த பிரம்மாண்ட வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}