கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் 2024 ல் ஆளும் எஸ்கேஎம் எனப்படும் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சிக்கும், சிக்கிம் ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் இதில் தங்களின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.
ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட சிக்கிம் சட்டசபை தேர்தலில் மொத்தம் 79.88 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. பலத்த பாதுகாப்புகளுடன் காலை 6 மணி துவங்கி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்தன.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 02ம் தேதியான இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சி 16 இடங்களில் வென்றது, 15 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் மட்டுமே எதிர்க்கட்சியான எஸ்டிஎஃப் கட்சி வெல்கிறது. சிக்கிமில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 17 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 31 இடங்களை அள்ளுகிறது எஸ்கேஎம் கட்சி. எதிர்க்கட்சி வரிசையில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே சட்டசபையில் நுழையவுள்ளார்.
அருணாச்சல் பிரதேசத்தில்.. அபார வெற்றி.. மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக!
சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சியின் நிறுவன தலைவருமான பிரேம் சிங் தமாங் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 56 வயதாகும் பிரேம் சிங், இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இவர் இதற்கு முன் 5 முறை சிக்கிம் முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}