அவர்கள்தான் திருடர்கள்.. நயினார் நகேந்திரனுக்கு எதிராக சதி வலை பின்னிருக்காங்க.. அண்ணாமலை பேச்சு!

Apr 08, 2024,05:29 PM IST

கோவை: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நகேந்திரனுக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டு இருப்பதாக  பாஜக தமிழக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சதீஷ், நவீன் உள்ளிட்ட 3 பேரை நேற்று முன்தினம் பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இது  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையாக இருந்தால்தான் நான் புகார் அளிக்க முடியும்.  இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை டார்கெட் செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது என்று கூறியிருந்தார்.




இந்த நிலையில் இது குறித்து திருப்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறுகையில், சதிவலை பின்னப்பட்டு அதில் நயினார் நாகேந்திரன் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. திமுகவினர் தான் உண்மையான திருடர்கள்.


இம்முறை தங்கச் சுரங்கத்தையே திமுக கொட்டினாலும் கோவையில் பாஜக தான் வெற்றி பெறும். பதிவாகும் வாக்குகளில் 60 சதவீதம் பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

Dr Latha Poems: நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்.. நலிவு எல்லாம் நொடியில் மறையும்!

news

நெருங்கி வரும் பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க இன்னும் சிக்கல் தீரல.. என்ன செய்வார் ஆளுநர்?

news

என் தேவியின் கை.. என் நெற்றியில் பட்டால் .. அவளின் (ல்) அவன்! (13)

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்