சண்டிகர் மேயர் தேர்தல்.. பாஜக அதிரடி வெற்றி.. அதிர்ச்சியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி

Jan 30, 2025,09:00 PM IST

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ப்ரீத் கெளர் பாப்லா 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளருக்கு 17 வாக்குகளே கிடைத்ததால் அவர் தோல்வியைத் தழுவினார்.


சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. நியமன கவுன்சிலர் ராம்நீக் சிங் பேடி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ தாக்கூர் கண்காணிப்பாளராக செயல்பட்டார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த தேர்தல் நடைபெற்றது.




இன்று காலை 11.20 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி பிற்பகல் 12.19 மணிக்கு முடிவுற்றது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பாஜக வேட்பாளருக்கு 19 வாக்குகளும், ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 17 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரேமலதா போட்டியிட்டிருந்தார்.


சண்டிகர் மாநகராட்சியில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர்.  இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 பேர் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 6 பேரும் உள்ளனர். மறுபக்கம் பாஜகவுக்கு 16 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள் தவிர சண்டிகர் எம்.பியும் வாக்களிக்கலாம்.  அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அந்த அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 20 வாக்குகளும் பாஜகவுக்கு 16 வாக்குகளும்தான் வந்திருக்க வேண்டும். அதாவது ஆம் ஆத்மியின் பிரேமலதாதான் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிப் போய் விட்டது.


சில நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கவுன்சிலர் குர்பக்ஸ் ராவத் பாஜகவுக்குத் தாவி வந்தார். இவர் தவிர கூடுதலாக கிடைத்த வாக்குகள் கட்சி மாறி வந்தவையாகும். தேர்தல் முடிவால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்