டெல்லி: தலைநகர் டெல்லியில் ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளியை ஒட்டிய பகுதியில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெடித்தது என்ன என்று தீவிர ஆய்வில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பள்ளியின் சுற்றுச் சுவர் லேசான சேதத்தை சந்தித்தது. டெல்லி போலீஸ் குழுவினரும் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான ஒரு வீடியோவை அந்தப் பகுதியில் வசிக்கும் யாரோ சிலர் சமூக வலைதளங்களில் போட்டுள்ளனர். அதில் வெடித்த பிறகு பெரும் புகை மூட்டம் எழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், வீட்டில் இருந்தபோது பலத்த வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது பள்ளி வளாகத்திலிருந்து பெரும் புகை வந்து கொண்டிருந்தது. அதை வீடியோவாக எடுத்தேன். அதற்கு மேல் எனக்குத் தெரியாது என்றார்.

இன்று காலை ஏழே முக்கால் மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதுவரை சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் அங்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வெடிச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. கடைகளில் உள்ள பெயர்ப் பலகைகள் சிலவும் கூட சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பள்ளி வளாகத்தைத் தாண்டி சற்று தொலைவில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள் சேதமடைந்துள்ளதால் வெடித்தது சற்று சக்தி வாய்ந்த பொருளாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு வெடிகுண்டு ஏதேனும் வெடித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்டா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
{{comments.comment}}