சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளாக்கி ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமியின் இறந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல் பிரதேச மாநிலம், கஷாஹ் நலா என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வெற்றி துரைசாமி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பலியானார். வெற்றி துரைசாமியின் உதவியாளர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். சட்லெஜ் ஆற்றில் போய் விழுந்த காரில் இருந்த வெற்றி என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்து. கடற்படையினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடத்தில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் இறந்த உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெற்றி துரைசாமியின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல் கிடைத்துள்ள தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியின் தந்தையான முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இமாச்சல் பிரதேசம் விரைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
திரைப்பட இயக்குநராகவும் இருந்தவர் வெற்றி துரைசாமி. ஒரு படம் இயக்கியுள்ளார். நடிகர் அஜீத்தின் நட்பு வட்டாரத்திலும் அவர் இருந்து வந்தார். எப்படியாவது வெற்றி உயிருடன் கண்டுபிடிக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவரது குடும்பத்தினருக்கு இருந்தது. ஆனால் தற்போது அவரது உடல் மீட்கப்பட்டிருப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}