டெல்லி: எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விஷயங்களை முன் வைத்தனர். அதேபோல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக எம்பிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தொடங்கிய பிறகு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இரு அவைகளும் நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 11 அளவில் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த 18 தீர்மானங்கள் தொடர்பான நோட்டீஸும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரையிலும், மாநிலங்களவை 11:30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது .
அதன் பின்னர் இரு அவைகளும் கூடிய பிறகும் கூட முழக்கங்கள், அமளிகள் ஓயவில்லை. இதையடுத்து இரு அவைகளும் இன்று நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}