டெல்லி: எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விஷயங்களை முன் வைத்தனர். அதேபோல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக எம்பிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தொடங்கிய பிறகு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இரு அவைகளும் நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 11 அளவில் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த 18 தீர்மானங்கள் தொடர்பான நோட்டீஸும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரையிலும், மாநிலங்களவை 11:30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது .
அதன் பின்னர் இரு அவைகளும் கூடிய பிறகும் கூட முழக்கங்கள், அமளிகள் ஓயவில்லை. இதையடுத்து இரு அவைகளும் இன்று நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்டா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
{{comments.comment}}