டெல்லி: எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விஷயங்களை முன் வைத்தனர். அதேபோல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக எம்பிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தொடங்கிய பிறகு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இரு அவைகளும் நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 11 அளவில் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த 18 தீர்மானங்கள் தொடர்பான நோட்டீஸும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரையிலும், மாநிலங்களவை 11:30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது .
அதன் பின்னர் இரு அவைகளும் கூடிய பிறகும் கூட முழக்கங்கள், அமளிகள் ஓயவில்லை. இதையடுத்து இரு அவைகளும் இன்று நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}