Parliament: 2வது நாளாக இன்றும் அமளி துமளி முழக்கம்.. நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

Nov 27, 2024,08:45 PM IST

டெல்லி: எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உட்பட  பல்வேறு விஷயங்களை முன் வைத்தனர். அதேபோல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக எம்பிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். 


நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தொடங்கிய பிறகு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இரு அவைகளும் நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.




அதன்படி இன்று காலை 11 அளவில் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த 18 தீர்மானங்கள் தொடர்பான நோட்டீஸும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரையிலும், மாநிலங்களவை 11:30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது .


அதன் பின்னர் இரு அவைகளும் கூடிய பிறகும் கூட முழக்கங்கள், அமளிகள் ஓயவில்லை. இதையடுத்து இரு அவைகளும் இன்று நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்