King Maker Chandrababu Naidu: நாய்டுவுக்கு போன் போட்ட மோடி.. வலை வீச்சில் குதித்த காங்கிரஸ்!

Jun 04, 2024,03:41 PM IST

டில்லி :  பாஜக கூட்டணி அமோக வெற்றி நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய போகும் மிகப் பெரிய பவர் நிதிஷ்குமார் மற்றும் சந்திர பாபு நாயுவிடம் தான் உள்ளது.


மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் பாஜக மட்டும் 441 இடங்களில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்கள் தேவை. ஆனால் தற்போது வரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரத்தின் படி, பாஜக கூட்டணி 300க்கு உட்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 




நிதீஷ்குமாரிடம் இப்போது 14 எம்பிக்கள் இருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவிடம் 16 பேர் உள்ளனர். இவர்கள் இருவரும் பின் வாங்கினால், பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போகும். எனவே இவர்கள் இருவரும் பாஜகவுக்கு மிக மிக முக்கியமாகியுள்ளனர். இந்த இருவரும் கிங் மேக்கர்களாக உருவாகியிருப்பதால் இவர்களை பாஜகவால் பகைத்துக் கொள்ள முடியாது. இவர்களில் யாராவது ஒருவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினால் கூட பாஜகவுக்கு அது சிக்கலாகி விடும்.


நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் இவரிடமும் உள்ள 30 எம்பி., இல்லை என்றால் பாஜக.,விற்கு பெரும்பான்மை கிடைக்காது. மத்தியில் ஆட்சி அமைக்கவும் முடியாது. ஒருவேளை இவர்கள் இந்தியா கூட்டணி பக்கம் தாவினால் உதிரி கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டு இந்தியா கூட்டணி கூட மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம். அதனால் தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதும், அமைக்காமல் போவதும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கைகளில் தான் உள்ளது. 


ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தாலும், அடுத்த 5 ஆண்டுகள் பிரச்சனையின்றி பாஜக ஆட்சி நடத்த வேண்டும் என்றாலும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபுவின் ஆதரவு தேவை. அதனால் இவர்கள் இருவரின் கட்சிகளுக்கும் கண்டிப்பாக மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி விட்டது. அவர்கள் விரும்பும் இலாக்காக்களை கேட்டு பெறுவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.


இதை பாஜகவும் முன்பே உணர்ந்திருந்தது. இதனால்தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நிதீஷ் குமாரை டெல்லிக்கு அழைத்துப் பேசினார். அவரிடம் கூட்டணியில் நீடிப்பது குறித்தும், முக்கியப் பதவிகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. நிதீஷ் குமார் மத்திய அமைச்சராக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி போனில் பேசினார்.


மறுபக்கம் இந்தியா கூட்டணியும் நாயுடுவை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு ஸ்கிரிப்ட் எழுதிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், நாயுடுவுடன் போனில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் நாயுடுவுக்கு டிமாண்ட் கூடியுள்ளது. நாயுடு வெளியே வந்தால், கூடவே பவன் கல்யாணும் பாஜக வை விட்டு வெளியேறும் வாய்ப்புள்ளது. இருவரும் வெளியேறி வந்தால் நிச்சயம் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போகும் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்