மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,430 புள்ளிகளுக்கு மேல் உயர்வைக் கண்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் உற்சாகம் நிலவுகிறது. பாதுகாப்புத் துறை தொடர்பான பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை இன்றும் ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்று லாபத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து 80912 ஆக இருந்தது. நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 24431 ஆக இருந்தது.

வியாழக்கிழமை காலை ஆசிய-பசிபிக் சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்துடன் இருந்தன. ஜப்பானின் நிக்கேய் 225, 0.23% அதிகரித்தது. ஆனால் டோபிக்ஸ் 0.12% குறைந்தது. தென் கொரியாவின் கோஸ்டாக் 0.61% உயர்ந்தது. கோஸ்பி 0.23% அதிகரித்தது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200, 0.12% உயர்ந்தது. சீனாவில், மெயின்லேண்ட் CSI 300, 0.31% அதிகரித்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 0.26% உயர்ந்தது.
Wall Street சந்தை Fed வட்டி விகிதத்தை மாற்றாமல் இருந்ததால் ஏற்றத்துடன் முடிந்தது. Dow Jones 0.70% உயர்ந்து 41,113.97 ஆக இருந்தது. Nasdaq Composite 0.27% அதிகரித்து 17,738.16 ஆக இருந்தது. S&P 500, 0.43% உயர்ந்து 5,631.28 ஆக இருந்தது.
பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதால், பங்குச் சந்தை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}