மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,430 புள்ளிகளுக்கு மேல் உயர்வைக் கண்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் உற்சாகம் நிலவுகிறது. பாதுகாப்புத் துறை தொடர்பான பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை இன்றும் ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்று லாபத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து 80912 ஆக இருந்தது. நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 24431 ஆக இருந்தது.

வியாழக்கிழமை காலை ஆசிய-பசிபிக் சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்துடன் இருந்தன. ஜப்பானின் நிக்கேய் 225, 0.23% அதிகரித்தது. ஆனால் டோபிக்ஸ் 0.12% குறைந்தது. தென் கொரியாவின் கோஸ்டாக் 0.61% உயர்ந்தது. கோஸ்பி 0.23% அதிகரித்தது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200, 0.12% உயர்ந்தது. சீனாவில், மெயின்லேண்ட் CSI 300, 0.31% அதிகரித்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 0.26% உயர்ந்தது.
Wall Street சந்தை Fed வட்டி விகிதத்தை மாற்றாமல் இருந்ததால் ஏற்றத்துடன் முடிந்தது. Dow Jones 0.70% உயர்ந்து 41,113.97 ஆக இருந்தது. Nasdaq Composite 0.27% அதிகரித்து 17,738.16 ஆக இருந்தது. S&P 500, 0.43% உயர்ந்து 5,631.28 ஆக இருந்தது.
பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதால், பங்குச் சந்தை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}