டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டு புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 7 சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிடாக் நிறுவனத்துடன் இணைந்து புதிய 5ஜி கட்டமைப்பு சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுரங்கப் பணிகளுக்கான சிறப்பு சேவையாகும்.
அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. அதன் சேவை அட்டகாசமாகவும் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அது பொலிவிழந்து நலிவடைந்து தளர்ந்து போனது. தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. சமீப காலமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவைக்கு பலரும் மாறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கவுள்ள நிலையில் இந்த புதிய மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளன.
பழைய லோகோவில் இருந்த Conencting India என்ற வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது. அதன் இலச்சினையில் இருந்த நிறமும் மாறியுள்ளது. முன்பு இருந்தது போல இல்லாமல் இப்போது காவி நிறப் பின்னணியில் இந்தியாவின் வரைபடமும் பச்சை மற்றும் வெண்மை நிற வளையமும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர புதிதாக Securely Affordably Reliable என்ற ஸ்லோகனும் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர 7 புதிய சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பேம் இல்லாத கட்டமைப்பு, தேசிய அளவிலான வைபை ரோமிங் வசதி, சிம்களை எந்த நேரத்திலும் வாங்க வகை செய்யும் கியாஸ்க்குகள், டைரக்ட் டு டிவைஸ் சேவை, சுரங்கங்களுக்கான 5ஜி சேவை, இன்ட்ராநெட் டிவி உள்ளிட்டைவயும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}