பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரெடி... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயார்... இன்று என்ன நடக்கும் ?

Feb 01, 2025,10:14 AM IST


டில்லி : பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைவரும் பட்ஜெட் உரையில் என்ன இருக்கும்? மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமாக இந்த பட்ஜெட் இருக்குமா? என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


மற்றொரு பக்கம் எதிர்க்கட்மிகளோ பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. பணவீக்கம், மகா கும்பமேளாவின் சமீபத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல், கடந்த கூட்டத் தொடரில் டாக்டர் அம்பேர்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனையை கிளப்பி, மத்திய அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைக்க திட்டமிட்டுள்ளன.




இந்த விஷயத்தில் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதே போல் வேலைவாய்ப்பு, வஃக்பு வாரி மசோதா விவகாரம், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டது என மத்திய அரசுக்கு எதிராக முன் வைக்க உள்ள பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விவகாரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி செயல்படலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் பணவீக்கம், வேலையில்லாத தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது என்ன நடக்குமோ என்ற நிலை உருவாகி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

news

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!

news

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி

news

யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!

news

ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்