டில்லி : பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைவரும் பட்ஜெட் உரையில் என்ன இருக்கும்? மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமாக இந்த பட்ஜெட் இருக்குமா? என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் எதிர்க்கட்மிகளோ பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. பணவீக்கம், மகா கும்பமேளாவின் சமீபத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல், கடந்த கூட்டத் தொடரில் டாக்டர் அம்பேர்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனையை கிளப்பி, மத்திய அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைக்க திட்டமிட்டுள்ளன.

இந்த விஷயத்தில் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதே போல் வேலைவாய்ப்பு, வஃக்பு வாரி மசோதா விவகாரம், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டது என மத்திய அரசுக்கு எதிராக முன் வைக்க உள்ள பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விவகாரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி செயல்படலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் பணவீக்கம், வேலையில்லாத தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது என்ன நடக்குமோ என்ற நிலை உருவாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
கரூர் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? பரபரக்கும் அரசியல் களம்
பஞ்சமி திதியில் வரும் வசந்த பஞ்சமி.. மிக மிக சிறப்பு!
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
டைப்ரைட்டிங் கீபோர்டில்.. எழுத்துக்கள் ஏன் மாறி மாறி இருக்கு தெரியுமா?
சித்திரம் பேசுதடி (சிறுகதை)
அம்மா!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
{{comments.comment}}