டில்லி : பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைவரும் பட்ஜெட் உரையில் என்ன இருக்கும்? மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமாக இந்த பட்ஜெட் இருக்குமா? என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் எதிர்க்கட்மிகளோ பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. பணவீக்கம், மகா கும்பமேளாவின் சமீபத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல், கடந்த கூட்டத் தொடரில் டாக்டர் அம்பேர்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனையை கிளப்பி, மத்திய அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைக்க திட்டமிட்டுள்ளன.

இந்த விஷயத்தில் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதே போல் வேலைவாய்ப்பு, வஃக்பு வாரி மசோதா விவகாரம், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டது என மத்திய அரசுக்கு எதிராக முன் வைக்க உள்ள பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விவகாரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி செயல்படலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் பணவீக்கம், வேலையில்லாத தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது என்ன நடக்குமோ என்ற நிலை உருவாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}