சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜனவரி 28, 2026) ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. மேலும், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் உலகச் சந்தையில் ஒருவிதப் பதற்றத்தை உருவாக்கியுள்ளதே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையால், பலரும் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் (ஜனவரி 5) சவரன் ஒரு லட்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது என்பது 'எட்டாக்கனி'யாக மாறி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுகு்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.15,610க்கும், ஒரு சவரன் ரூ.1,24,880க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
குடியரசு தின விழாவில் அசத்திய பண்ணைவிளாகம் பள்ளி மாணவர்கள்!
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
சபாஷ் டீச்சர்ஸ்.. தேசிய புதுமை கல்வி ரத்னா விருது.. தமிழ்நாட்டிலிருந்து 4 ஆசிரியர்கள் தேர்வு!
காலம் எனும் மரம்!
அஞ்சா மங்கை.. வீரத் தளபதி குயிலி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. உண்ணும் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}