நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா

Aug 27, 2026,10:40 AM IST

காத்மாண்டு: நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்க உணர்வுக்கு, நிலநடுக்கம் காரணமல்ல என்றும், பனிப்பாறை சரிவு மற்றும் பாறைச் சிதைவுகளின் நகர்வே காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.


முன்னதாக, நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த பிறகு, நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்றும், லெண்டே ஆற்றுப் பகுதியில் பனிப்பாறை மற்றும் பாறைகள் திடீரென சரிந்து ஆற்று வெள்ளத்துடன் கலந்து அடித்து வரப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இந்த திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 157-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனா எல்லைப் பகுதியை ஒட்டிய ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.


நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நீர்மின் திட்ட உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மீட்புப் பணிகள் இரவிலும் செல்போன் வெளிச்சத்தில் நடைபெற்று வருகின்றன.


பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி மீட்புப் பணிகளை விரைவுபடுத்த நேபாள பிரதமர் பாலெந்திர ஷா உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்