சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட கட்சி தான் தவெக. இந்த கட்சியின் நிலைமை அக்டோபர் 27ம் தேதிக்கு பின்னர் தலைகீழாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் மாநாட்டிற்கு முன்னர் வரை சாதாரணமாகவே இருந்தது தவெக கட்சி. மாநாட்டிற்கு பின்னர் அந்த கட்சி குறித்தும், அந்த கட்சி தலைவர் விஜய் பேசியது குறித்து அனைத்து கட்சியினரும் காரசாரமாக விவாதத்தை தொடங்கி விட்டார்கள். மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை தவெக கட்சி குறித்த பேச்சாகவே இருந்து வருகிறது எனலாம்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் எங்க வழி தனி வழி என்று எதையும் பொருட்படுத்தாது, தங்கள் கட்சிப்பணிகளில் மட்டுமே கவனமாகவும், டீப்பாகவும் செய்படுவோம் என்று தவெக தலைவர் விஜய் பாணியில் பயணித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் என்றாலும் இப்போதே தேர்தல் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழக கட்சியினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நோட்டீஸ் விநியோகிக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அது மட்டும் இன்றி நவ., 16,17,23 தேதிகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க பரப்புரை செய்க என்றும் தவெக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}