சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட கட்சி தான் தவெக. இந்த கட்சியின் நிலைமை அக்டோபர் 27ம் தேதிக்கு பின்னர் தலைகீழாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் மாநாட்டிற்கு முன்னர் வரை சாதாரணமாகவே இருந்தது தவெக கட்சி. மாநாட்டிற்கு பின்னர் அந்த கட்சி குறித்தும், அந்த கட்சி தலைவர் விஜய் பேசியது குறித்து அனைத்து கட்சியினரும் காரசாரமாக விவாதத்தை தொடங்கி விட்டார்கள். மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை தவெக கட்சி குறித்த பேச்சாகவே இருந்து வருகிறது எனலாம்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் எங்க வழி தனி வழி என்று எதையும் பொருட்படுத்தாது, தங்கள் கட்சிப்பணிகளில் மட்டுமே கவனமாகவும், டீப்பாகவும் செய்படுவோம் என்று தவெக தலைவர் விஜய் பாணியில் பயணித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் என்றாலும் இப்போதே தேர்தல் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழக கட்சியினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நோட்டீஸ் விநியோகிக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அது மட்டும் இன்றி நவ., 16,17,23 தேதிகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க பரப்புரை செய்க என்றும் தவெக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
Feelings are the language of the soul .. ஆன்மாவின் மொழிதான் உணர்வு!
{{comments.comment}}