சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட கட்சி தான் தவெக. இந்த கட்சியின் நிலைமை அக்டோபர் 27ம் தேதிக்கு பின்னர் தலைகீழாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் மாநாட்டிற்கு முன்னர் வரை சாதாரணமாகவே இருந்தது தவெக கட்சி. மாநாட்டிற்கு பின்னர் அந்த கட்சி குறித்தும், அந்த கட்சி தலைவர் விஜய் பேசியது குறித்து அனைத்து கட்சியினரும் காரசாரமாக விவாதத்தை தொடங்கி விட்டார்கள். மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை தவெக கட்சி குறித்த பேச்சாகவே இருந்து வருகிறது எனலாம்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் எங்க வழி தனி வழி என்று எதையும் பொருட்படுத்தாது, தங்கள் கட்சிப்பணிகளில் மட்டுமே கவனமாகவும், டீப்பாகவும் செய்படுவோம் என்று தவெக தலைவர் விஜய் பாணியில் பயணித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் என்றாலும் இப்போதே தேர்தல் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழக கட்சியினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நோட்டீஸ் விநியோகிக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அது மட்டும் இன்றி நவ., 16,17,23 தேதிகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க பரப்புரை செய்க என்றும் தவெக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை.. முன்னாள் அதிமுக முதல்வர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்!
திமுக.,வில் ஓபிஎஸ்...தென் மாவட்டங்களில் பலத்தை இழக்கிறதா அதிமுக?
நிச்சயம் திமுக தோற்கும்.. உறுதி செய்து விட்டார் ஓபிஎஸ்.. டாக்டர் தமிழிசை பலே டிவீட்!
சட்டமன்றத் தேர்தல் 2026: 234 தொகுதிகளிலும் மார்ச் 1ல் கழகச் செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு!
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்... ஓபிஎஸ் வரவு நல்வரவாகட்டும்: முதல்வர் முக ஸ்டாலின் பதிவு!
நடிகையுடன் விஜய்க்குத் தொடர்பு.. விவாகத்து தர வேண்டும்.. மனைவி சங்கீதா பரபரப்பு வழக்கு
தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 5ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்!
திருத்தணி பேருந்து நிலையத்துக்கு ம.பொ.சி பெயரை நீடிக்க வேண்டும்.. சீமான் கோரிக்கை
மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}