சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட கட்சி தான் தவெக. இந்த கட்சியின் நிலைமை அக்டோபர் 27ம் தேதிக்கு பின்னர் தலைகீழாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் மாநாட்டிற்கு முன்னர் வரை சாதாரணமாகவே இருந்தது தவெக கட்சி. மாநாட்டிற்கு பின்னர் அந்த கட்சி குறித்தும், அந்த கட்சி தலைவர் விஜய் பேசியது குறித்து அனைத்து கட்சியினரும் காரசாரமாக விவாதத்தை தொடங்கி விட்டார்கள். மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை தவெக கட்சி குறித்த பேச்சாகவே இருந்து வருகிறது எனலாம்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் எங்க வழி தனி வழி என்று எதையும் பொருட்படுத்தாது, தங்கள் கட்சிப்பணிகளில் மட்டுமே கவனமாகவும், டீப்பாகவும் செய்படுவோம் என்று தவெக தலைவர் விஜய் பாணியில் பயணித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் என்றாலும் இப்போதே தேர்தல் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழக கட்சியினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நோட்டீஸ் விநியோகிக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அது மட்டும் இன்றி நவ., 16,17,23 தேதிகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க பரப்புரை செய்க என்றும் தவெக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!
எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நட்பு
மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
கள்ளக்குறிச்சி பூங்காவில் களை கட்டும் கூட்டம்.. படகு சவாரி, நீச்சல் குளம்.. கொண்டாட்டம்!
எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!
ராத்திரியானா சவுண்டு ஜாஸ்தியா இருக்கா.. குறட்டையை நிறுத்தும் இயற்கை வைத்தியம்!
{{comments.comment}}