சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கியுள்ள தேர்வு மார்ச் 13-ஆம் தேதி நிறைவடைகிறது. அதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி நிறைவடைகிறது. இந்தத் தேர்வினை 36 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.

இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு நிறைவடைகிறது. ஒரு சில தேர்வுகள் மட்டும் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு அரைக்கு வரவேண்டும் என்றும், செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்கள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள்களில் எதையும் எழுதக்கூடாது. தேர்வின் போது காப்பியடித்தல் கூடாது. அருகில் இருக்கும் மாணவர்களிடம் பேசக் கூடாது என சிபிஎஸ்சி நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}