சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கியுள்ள தேர்வு மார்ச் 13-ஆம் தேதி நிறைவடைகிறது. அதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி நிறைவடைகிறது. இந்தத் தேர்வினை 36 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.

இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு நிறைவடைகிறது. ஒரு சில தேர்வுகள் மட்டும் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு அரைக்கு வரவேண்டும் என்றும், செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்கள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள்களில் எதையும் எழுதக்கூடாது. தேர்வின் போது காப்பியடித்தல் கூடாது. அருகில் இருக்கும் மாணவர்களிடம் பேசக் கூடாது என சிபிஎஸ்சி நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}