டில்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இமெயில், போஸ்ட் என பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளுக்கும் இந்தியா அதிரடி தடை விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. அதாவது இந்தியா.பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, இந்தியா உடனடியாக செயல்பட்டு, இந்திய பாகிஸ்தான் இடையே போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வாகா-அட்டாரி எல்லை பகுதிகள் மூடப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில், தற்போது இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடைவிதித்துள்ளது. மேலும் இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தானில் இருந்து வரும் இமெயில், போஸ்ட் ஆகியவற்றிற்கும் தடை விதித்துள்ளது இந்தியா.
மனிதர்களுக்குத்தான் மன அழுத்தம்... வாஸ்தவம்தான்.. அது என்ன காற்றுக்கு அழுத்தம்?
என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்வு... சவரனுக்கு ரூ.1,440 உயர்வு!
தலைநகர் சென்னையில்.. பெரம்பூரில் போட்டியிடுங்கள்... விஜய்க்கு தவெக நிர்வாகிகள் வேண்டுகோள்
நெருக்கடி நேரத்துல.. மண்டையைப் பிச்சுக்காதீங்க.. ஈஸியா முட்டைக் குழம்பு வச்சு அசத்துங்க..!
டி 20 உலகக் கோப்பை.. இந்தியாவை சிக்கல்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களேய்யா!
"நாளை உன் கண்கள் என்னைத்தான் தேடும்" .. (நீ மழை.. 4)
அத்தி வரதர் மார்ச் 01ம் தேதி மீண்டும் வெளியே வருகிறார்.. எந்த ஊரில் தெரியுமா?
{{comments.comment}}