டில்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இமெயில், போஸ்ட் என பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளுக்கும் இந்தியா அதிரடி தடை விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. அதாவது இந்தியா.பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்தியா உடனடியாக செயல்பட்டு, இந்திய பாகிஸ்தான் இடையே போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வாகா-அட்டாரி எல்லை பகுதிகள் மூடப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில், தற்போது இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடைவிதித்துள்ளது. மேலும் இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தானில் இருந்து வரும் இமெயில், போஸ்ட் ஆகியவற்றிற்கும் தடை விதித்துள்ளது இந்தியா.
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்
பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு
பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!
பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!
{{comments.comment}}