பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி

May 03, 2025,04:55 PM IST

டில்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதோடு இமெயில், போஸ்ட் என பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளுக்கும் இந்தியா அதிரடி தடை விதித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. அதாவது இந்தியா.பாகிஸ்தானுக்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 




அதன்படி, இந்தியா உடனடியாக செயல்பட்டு, இந்திய பாகிஸ்தான் இடையே  போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வாகா-அட்டாரி எல்லை பகுதிகள்  மூடப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில், தற்போது இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடைவிதித்துள்ளது. மேலும் இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தானில் இருந்து வரும் இமெயில், போஸ்ட் ஆகியவற்றிற்கும் தடை விதித்துள்ளது இந்தியா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

news

2030 காமன்வெல்த் போட்டி.. அகமதாபாத்தில் நடத்த இந்தியா திட்டம்.. ஒப்புதல் அளித்தது IOA

news

தொடர்ந்து 4வது நாளாக குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி.. டேஸ்ட்டியானது.. ஹெல்த்தியானது.. லஞ்ச்சுக்கு பெஸ்ட் ரெசிப்பி!

news

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்.. அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார் டாக்டர் மைத்ரேயன்

news

பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்