டெல்லி: சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட இந்தியாவில் செயல்பட்டு வரும் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க எக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு எக்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், கணக்குகளை முடக்காவிட்டால் எக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் சட்ட விதிகளை மீறியதாகக் கூறி 8,000க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை X நிறுவனம் ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தத் தகவலை X நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இதில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் மற்றும் பல முக்கிய X பயனர்களின் கணக்குகளும் அடங்கும். அபராதம் மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக X தெரிவித்துள்ளது.

அதேசமயம், மத்திய அரசின் இந்த உத்தரவு நியாயமற்றது என்று எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எந்தெந்த பதிவுகள் இந்தியாவின் சட்டங்களை மீறுகின்றன என்பதை இந்திய அரசு குறிப்பிடவில்லை. பல கணக்குகளை முடக்க எந்த ஆதாரமும் அல்லது காரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று எக்ஸ் கூறியுள்ளது.
கணக்குகளை முடக்குவது கடினமான முடிவுதான். ஆனால் இந்தியாவில் எக்ஸ் தளம் தொடர்ந்து இயங்குவது முக்கியம். அப்போதுதான் மக்கள் தகவல்களைப் பெற முடியும் என்று நம்புகிறோம் என்றும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்டப்படி என்னென்ன வழிகளில் இதை அணுக முடியுமோ அதை எல்லாம் எக்ஸ் ஆராய்ந்து வருகிறது. ஆனால் இந்திய சட்டங்கள் எக்ஸ் நிறுவனத்தின் கைகளை கட்டிப்போட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயனர்கள் நீதிமன்றத்தை அணுகி நேரடியாக உதவி பெற எக்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}