முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்.. இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு

Dec 28, 2024,10:34 AM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடல் ராஜ்காட் அருகே தகனம் செய்யப்படவுள்ளது. அவருக்கு முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.


இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர்கள், உயரிய தலைவர்களுக்கு அவர்களது உடல் அடக்கம் அல்லது தகனம் நடைபெறும் இடத்தில்தான் நினைவிடம் அமைக்கப்படும். இதுதான் வழக்கம். அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கேவும்  பேசினார்.  மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.




இந்த நிலையில் மத்திய அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்டிப்பாக நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கித் தரப்படும். அதுவரை இறுதிச் சடங்குகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஒரு புகழ் பெற்ற தலைவருக்கு உரிய நினைவிட இடத்தை முடிவு செய்வதில் இத்தனை தடுமாற்றம் ஏன். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரை பாஜக அவமானப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


ஆனால் காங்கிரஸ் இதில் அசிங்கமான அரசியல் செய்கிறது. அதை முதலில் காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை காங்கிரஸ் அவரது மறைவுக்குப் பிறகு எப்படி நடத்தியது என்பதை அனைவரும் அறிவர். அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியதை நாடு அறியும் என்று கூறியுள்ளது பாஜக.


இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சோலைக்குள் ஓர் நாள்!

news

வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!

news

நம்பிக்கை என்பது யாதெனில்....!

news

IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!

news

புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!

news

உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)

news

தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!

news

Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்