முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்.. இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு

Dec 28, 2024,10:34 AM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடல் ராஜ்காட் அருகே தகனம் செய்யப்படவுள்ளது. அவருக்கு முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.


இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர்கள், உயரிய தலைவர்களுக்கு அவர்களது உடல் அடக்கம் அல்லது தகனம் நடைபெறும் இடத்தில்தான் நினைவிடம் அமைக்கப்படும். இதுதான் வழக்கம். அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கேவும்  பேசினார்.  மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.




இந்த நிலையில் மத்திய அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்டிப்பாக நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கித் தரப்படும். அதுவரை இறுதிச் சடங்குகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஒரு புகழ் பெற்ற தலைவருக்கு உரிய நினைவிட இடத்தை முடிவு செய்வதில் இத்தனை தடுமாற்றம் ஏன். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரை பாஜக அவமானப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


ஆனால் காங்கிரஸ் இதில் அசிங்கமான அரசியல் செய்கிறது. அதை முதலில் காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை காங்கிரஸ் அவரது மறைவுக்குப் பிறகு எப்படி நடத்தியது என்பதை அனைவரும் அறிவர். அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியதை நாடு அறியும் என்று கூறியுள்ளது பாஜக.


இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்