முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்.. இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு

Dec 28, 2024,10:34 AM IST

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடல் ராஜ்காட் அருகே தகனம் செய்யப்படவுள்ளது. அவருக்கு முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.


இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர்கள், உயரிய தலைவர்களுக்கு அவர்களது உடல் அடக்கம் அல்லது தகனம் நடைபெறும் இடத்தில்தான் நினைவிடம் அமைக்கப்படும். இதுதான் வழக்கம். அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜூன கார்கேவும்  பேசினார்.  மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.




இந்த நிலையில் மத்திய அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்டிப்பாக நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கித் தரப்படும். அதுவரை இறுதிச் சடங்குகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஒரு புகழ் பெற்ற தலைவருக்கு உரிய நினைவிட இடத்தை முடிவு செய்வதில் இத்தனை தடுமாற்றம் ஏன். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரை பாஜக அவமானப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


ஆனால் காங்கிரஸ் இதில் அசிங்கமான அரசியல் செய்கிறது. அதை முதலில் காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை காங்கிரஸ் அவரது மறைவுக்குப் பிறகு எப்படி நடத்தியது என்பதை அனைவரும் அறிவர். அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியதை நாடு அறியும் என்று கூறியுள்ளது பாஜக.


இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மௌனமாக விழித்திருந்தது.. ஒரு கவிதை!

news

தொண்டை கரகரப்பு.. தொண்டை கட்டு.. தொண்டை வலி.. இவற்றிற்கு பாட்டி வைத்தியம் என்ன தெரியுமா?

news

என் இனிய உடலே.. Dear body, I love you!

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

news

2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்